தமிழ்நாடு:



  • பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

  • 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

  • நரிக்குறவ மக்களுக்கு பழங்குடியினர் தகுதி வழங்கிய மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  • அதிமுகவின் தொண்டர்களின் வழியில் தான் தன்னுடைய பயணம் இருக்கும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

  • தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்தியா:



  • ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்ய உள்ளார்.

  • ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீனா அதிபர் ஸி ஜிங்பிங்கை சந்தித்து பேச  உள்ளதாக தகவல்.

  • இந்திய விமானப்படைக்கு 100 டிரோன்கள் வாங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்.

  • கோவாவில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

  • இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்க குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

  • மும்பையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனை.

  • நாட்டின் பாதுகாப்பில் இளையோர் பங்கேற்கும் அக்னிபத் திட்டத்தை ஆதரிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

  • எஃப் 16 போர் விமானங்களை சீரமைக்க பாகிஸ்தானிற்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க கூடாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்.


உலகம்:



  • இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று குறைந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

  • பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்டுள காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

  • தாய்லாந்தில் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சுடுதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • இந்தியாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இலங்கை தொடங்கியுள்ளது.

  • கிழக்கு சீனாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக சீனாவின் ஷாங்காய் பகுதியில் கனமழை பெய்துள்ளது.

  • ஜோர்டான் தலைநகர் அம்மானில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


விளையாட்டு:



  • பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் தலைவர்கள் பதவி காலத்தை நீட்டிக்கும் விதி அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

  • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகாட் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

  • சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் கர்மன் தாண்டி போராடி தோல்வி அடைந்தார்.