தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம்.

  • தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு தொடர்பாக வரும் 5ஆம் தேதி போராட்டம் நடத்த அதிமுக முடிவு.

  • ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கண்மாயை மீட்க கோரி மக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்.

  • சென்னை ஐஐடி மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக விசாரிக்க தனிப்படை போலீஸ் கர்நாடக மாநிலம் கூர்க் விரைந்தது.

  • திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மினி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து. கார் ஓட்டுநர் மட்டும் தீயில் சிக்கி பலி.


இந்தியா:



  • இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகைக்கான நொன்பு இன்று முதல் தொடக்கம். 

  • மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச பகுதிகளில் நேற்று இரவு சில மணி நேரம் வானில் தோன்றிய விண்கல்.

  • டெல்லியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த காவலரை காளை ஒன்று தாக்கிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • கேரள கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து நடுரோட்டில் தீ பிடித்து எரிந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் முன்பே இறங்கியதால் பெரும் விபத்து தவிர்ப்பு.


உலகம்:



  • இலங்கை நாட்டிற்கு இந்தியா 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை அனுப்பி வைத்துள்ளது. 

  • இந்தியா-துருக்மெனிஸ்தான் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 

  • இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் சந்தைகளில் அலைமோதியது.

  • இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக உலக சுகாதார மையம் தகவல்.


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை குஜராத் டைட்ன்ஸ் அணி வீழ்த்தியது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண