Adani Hindenburg Case: அதானி - ஹிண்டன்பெர்க் விவகாரம்: SEBI அமைப்பே விசாரிக்கும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Adani Hindenburg Case: அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை தொடர்பான விவகாரத்தை, செபி (SEBI) அமைப்பே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Continues below advertisement

Adani Hindenburg Case: அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் நியமித்த 6 பேர் கொண்ட குழு கடந்த ஆண்டே சமர்பித்தது.

Continues below advertisement

உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில், “அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க தேவையில்லை. அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த செபி அமைப்புக்கு அதிகாரம் உள்ளது.3 மாதத்தில் இதுதொடர்பான விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும். ஹிண்டன்பெர்க் அறிக்கை தொடர்பாக நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகள் அடிப்படையில் மத்திய அரசும், செபியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிபுணர் குழு அறிக்கையை ஆய்வு செய்து இந்திய முதலீட்டாளர்களின் நலனை உறுதி செய்ய வேண்டும். ஹிண்டன்பெர்க் அறிக்கையில் சட்டவிதி மீறல் இருந்தால் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பங்குச்சந்தை அந்நிய முதலீடு தொடர்பான செபி விதிகளில் நீதிமன்றம் தலையிட அவசியமில்லை. ஒழுங்காற்று அமைப்புகளின் அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் தலையிட முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமம்:

இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் அதானியும் ஒருவர். அவரது தலைமையிலான அதானி குழுமம், குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் துறைமுகம், எரிசக்தி மற்றும் உணவுப்பொருள் உட்பட பல்வேறு தொழில்துறைகளில் இந்தியாவின் பல மாநிலங்களில் மட்டுமின்றி, பல அவெளிநாடுகளிலும் தொழில் செய்து வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அந்நிறுவனத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெறுகிறது.

ஹிண்டன்பெர்க் அறிக்கை:

இந்த சூழலில் தான், கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டது. பங்கு மதிப்பில் உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றது, பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது, அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. மேலும், கணக்குகளில் முறைகேடுகளை செய்து பொய்யாக வெளியிட்டு வருவதாகவும், நிறுவன கடன்களை பெருமளவு மறைத்து இருப்பதாகவும், இதனால் பங்கு சந்தையில் தனது முதலீட்டாளர்களுக்கு உண்மையான தகவல்களை மறைத்த குற்றத்தை புரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அறிக்கை இந்தியாவில் பெரும் சர்ச்சையாக வெடிக்க, அதானி குழுமம் பங்குச்சந்தையில் பெரும் சரிவை கண்டது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் முழங்கின. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து அதானி வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு:

இதனிடையே, அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டும் ஹிண்டன்பெர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என கோரி,  உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிமன்றம் செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச் சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. வழக்கு விசாரணை கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி முடிவடந்த நிலையில், அக்குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த நிலையில் தான், அதானி - ஹிண்டன்பெர்க் விவகாரத்தை செபி அமைப்பே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola