• ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் டோக்கன் முறையில் விநியோகிக்கப்படும் – கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முடிவு.

        • தமிழகத்தின் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது. இரண்டு நாட்களில் தடுப்பூசிகள் தீர்ந்துவிடும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.










      • வரும் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படாது – சுகாதாரத்துறை செயலாளர்.

      • தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புஒரு வாரத்திற்கு பிறகு 28 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. உயிரிழப்பு நேற்று 478 ஆக பதிவாகியது. 

      • தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் மே மாதம் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழப்பு.

      • மாதம் ஊதியமின்றி பணியாற்றும் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிதியுதவித்தொகை – தமிழக அரசு.

      • இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசுக்கு டெல்டா என்று பெயர் சூட்டியது உலக சுகாதார அமைப்பு.








    • மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அந்தோபத்யாய் முதல்-அமைச்சரின் தலைமை ஆலோசகராக நியமனம் –மம்தா பானர்ஜி அறிவிப்பு

    • பி.எப். சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் இருந்து முன்பணம் எடுக்க அனுமதி – தொழிலாளர் வைப்பு நிதி ஆணையம் அறிவிப்பு












  • சீனாவில் ஒரு குடும்பத்தினர் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அந்த நாட்டு அரசு அனுமதித்துள்ளது.