தமிழ்நாடு :



  • தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2,654 பேருக்கு கொரோனா உறுதி - அதிகபட்சமாக சென்னையில் 1,066 பேருக்கு தொற்று உறுதியானது

  • சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு  சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனு தள்ளுபடி

  • சிதம்பரத்தின் ஏழை எளிய மக்களின் மருத்துவர் அசோகன் மாரடைப்பால் மரணம் - பொதுமக்கள் சோகம்

  • ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோர முடியாது - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற  கோரி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம்

  • இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

  • தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்கள் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

  • சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்து


இந்தியா :



  • இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 16 பேர் பலி 

  • காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் அதிரடி கைது

  • 2022 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி தேர்வு 

  • தெலங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத்தின் பெயர் மாற்றம் - பாஜக அறிவிப்பால் சர்ச்சை 

  • வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது - மத்திய அரசு 

  • நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் செல்லும் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து


உலகம் :



  • அமெரிக்காவில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு - 6 பேர் பலி

  • ஈராக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிந்த சம்பவத்தில் 300 பேருக்கு மூச்சுத்திணறல்

  • மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பாசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி

  • போதுமான எரிபொருள் இல்லாததால் இந்தியாவுக்கான சரக்கு விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிறுத்தியது

  • காளி ஆவணப்படத்தை திரும்ப பெற வேண்டும் என கனடாவில் உள்ள இந்திய தூதரகம்  கோரிக்கை


விளையாட்டு :



  • இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 378 ரன்கள் இலக்கு - 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. 

  • பெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இந்தியா-சீனா அணிகள் இன்று மோதல்

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில்  ஹாலெப், ரிபகினா காலிறுதிக்கு தகுதி

  • டிஎன்பிஎல் தொடரில் திருப்பூரை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி

  • அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த சந்தர்பால் நியமனம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண