தமிழ்நாடு: 



  • எடப்பாடி அணி அறிவித்த வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் அணி ஏற்க மறுப்பு - அதிமுகவில் மீண்டும் குழப்பம்

  • மழையில் மூழ்கிய சம்பா பயிர்களுக்கு நெல் கொள்முதலில் தளர்வுகள் வழங்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் 

  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் 

  • தமிழ்நாடு முழுவதும் தைப்பூசம் கோலாகல கொண்டாட்டம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு; வடபழனி, பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல கோயில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்

  • டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் குழு ஆய்வு

  • மாதந்தோறும் மின் கட்டணம் திட்டம் விரைவில் நிறைவேற்றம் - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

  • உச்சநீதிமன்ற தீர்ப்பு படி அதிமுக அவைத் தலைவர் செயல்படவில்லை என ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • இயக்குநர் டி. பி. கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இந்தியா:



  • ஆன்லைன் சூதாட்டம், கடன் சேவை உள்ளிட்ட 232 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை 

  • இதுவரை 48 கோடி பேர் இணைத்துள்ளனர்; ஆதார் இணைக்காத பான் எண் ஏப்ரல் முதல் செல்லாது - மத்திய அரசு அறிவிப்பு

  • சோலார் மற்றும் துணை எரிசக்தி மூலங்களில் ஒரே நேரத்தில் செயல்படும் ஒரு புரட்சிகரமான சூரிய சமையல் அடுப்பு மாதிரியை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

  • உலக வெப்பமயமாதலை தடுக்க ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து  செயல்பட வேண்டும் - மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்


உலகம்:



  • உளவு பலூனை சுட்டு வீழ்த்திய விவகாரம்; கடும் பின்விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும் என சீனா எச்சரிக்கை

  • பாகிஸ்தான் பலூசிஸ்தானில் உள்ள குவெட்டாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இத்தாக்குதலுக்கு, தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) என்ற தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றது.

  • பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் (79) உடல்நலக்குறைவால் நேற்று துபாயில் காலமானார்.

  • ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப், சூரியன்-பூமி அமைப்பின் லாக்ரேஞ்ச் பாயின்ட் 2 இல் பணிபுரியும் விண்மீன் திரள்களின் நெரிசலான புலத்தை பதிவு செய்துள்ளது.

  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.86 கோடியாக உயர்வு

  • சிலி: காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 22ஆக உயர்வு

  • ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. 


விளையாட்டு:



  • ஆசிய கோப்பைக்கு தொடர்க்கு  வரவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் எச்சரிக்கை.

  • இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய பௌலர் ஹேசில்வுட் விலகல்.

  • 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியின் ஜெர்சி அணிவது மகிழ்ச்சி அளிக்கிறது - ஜடேஜா 

  • "ரஷ்யா கலந்துகொண்டால் ஒலிம்பிக்கை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை", அழுத்தமாக கூறிய உக்ரைன்!

  • மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.