தமிழ்நாடு:



  • வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் - அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு அரணாக இருக்கும் என உறுதி 

  • வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டு சிறை என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை - ஏற்கனவே திட்டமிட்டபடியே தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதாக விளக்கம் 

  • சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தியே வடமாநில தொழிலாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது - கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் கூட்டாக பேட்டி 

  • திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசிய மாநகர காவல் ஆணையர் - இந்தியில் பேசி குறைகளை கேட்டறிந்து பாதுகாப்பு குறித்து விளக்கம் 

  • வடமாநில தொழிலாளர்கள் நிலை குறித்து பீகார் குழு தமிழகம் வருகை - சென்னையில் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை 

  • வடமாநில தொழிலாளர்கள் அதிகமுள்ள பகுதியில் காவல்துறையினர் கலந்துரையாடி விழிப்புணர்வு - தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக  தொழிலாளர்கள் கருத்து 

  • தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வடமாநில தொழிலாளர்கள் முக்கியமானவர்கள்  - அவர்களுக்கு எதிராக பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை என பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் 

  • மார்ச் 9 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என தகவல் 

  • இந்தியாவில் தேசபக்தியையும், கடவுள் பக்தியையும் பிரிக்க முடியாது - ரமண மகரிஷியின்143வது ஆண்டு ஜெயந்தி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு 

  • கொடைக்கானல் மலைப்பகுதியில் 2023 ஆம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் 

  • ஹோலி பண்டிகையையொட்டி கோவையில் இருந்து இன்று சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு 



இந்தியா: 



  • வடமாநில தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் என பரவிய வீடியோக்கள் போலியானவை - வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை

  • இந்தியாவில் சத்தமின்றி வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சர்வதேச மருத்துவ கூட்டமைப்பு எச்சரிக்கை - ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்

  • செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி பணமோசடி செய்த விவகாரத்தில் 10க்கும் மேற்பட்டோர் கைது - 25 ஆயிரம் சிம்கார்டுகள், 2500 செல்போன்கள் பறிமுதல் 

  • டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியோவுக்கு மேலும் 2 நாட்கள் சிபிஐ காவல் - விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறிய நிலையில் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு 

  • இந்திய-இலங்கை மீனவர்கள் கலந்துக்கொண்ட கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா நிறைவு 

  • 2022-23 ஆம் ஆண்டுக்கான தங்கப் பத்திரம் விற்பனை மார்ச் 6 ஆம் தேதி தொடக்கம் - 10 ஆம் தேதி வரை முதலீடு செய்ய அவகாசம் 

  • சோழர்களால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை இன்று மக்களுக்கு பயனளித்து  வருகிறது - பிரதமர் மோடி பெருமிதம் 


உலகம்: 



  • பிலிப்பைன்ஸ் நாட்டில் நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாண கவர்னர் சுட்டுக்கொலை 

  • கொரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி மரணம் - வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் மரணத்தில் போலீசார் சந்தேகம் 


விளையாட்டு: 



  • தாய்லாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை ஸ்னூக்கர் தொடர்  - ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனை அனுபமா தங்கம் வென்றார்

  • முதலாவது மகளிர் ப்ரிமீயர் லீக் தொடர் கோலகலமாக தொடக்கம் - முதல் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி