தமிழ்நாடு: 



  • பிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம்; 8.75 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர் - மாணவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து

  • வடமாநில தொழிலாளர்களுக்கு மிரட்டலா? நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு

  • மதுரை ஏர்போர்ட்டில் பயணி தாக்கப்பட்ட சம்பவம்: எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ உட்பட 6 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

  • தஞ்சாவூரில் கொலை வழக்கில் பிடிக்க சென்றபோது 2 எஸ்.ஐ, ஏட்டுக்கு அரிவாள் வெட்டு: ரவுடிகளை சுட்டுபிடித்த காவல்துறை

  • மரக்காணம் அருகே கறிக்காக அரியவகை ஆமை கடத்திச் சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

  • "ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் ஒருநாள் லோக் ஆதாலத் நடத்தப்பட வேண்டும்" - முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம்

  • தமிழ்நாடு,புதுச்சேரியில் மார்ச் 14, 15, 16 ஆகிய நாள்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • மோடிக்கு பாடம் கற்பிக்கும் தகுதியுள்ள ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா

  • மேற்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்; நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

  • வெங்கையா நாயுடுவின் அரசியல் வாழ்க்கையில் சிறு களங்கம் என்று சொல்ல எதுவும் கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 


இந்தியா: 



  • பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் நாடாளுமன்றத்தில் இன்று கூடுகிறது : ஆன்லைன் சூதாட்ட ரம்மிக்கு தடை குறித்து விவாதிக்க திமுக நோட்டீஸ்

  • வளர்ச்சி பணிகளில் பாஜக கவனம் செலுத்துகிறது, காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுகிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

  • பீகார் மாநிலத்தின் முதல் H3N2 நோயாளி தொற்றிலிருந்து குணமடைந்தார். 30 வயதான பெண் மருத்துவ மாணவிக்கு கடந்த வாரம் H3N2 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

  • சந்திரசேகர் ராவுக்கு எதிர்பாராதவிதமாக வயிற்றில் உபாதை ஏற்பட்டதையடுத்து, நேற்று காலை ஏஐஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

  • நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா மற்றும் h3n2 வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் வழிக்காட்டுதல் முறை வெளியிடப்பட்டுள்ளது.

  • குஜராத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்த நபரை, அடித்து சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு இடையூறு விளைவிப்பதாக மிரட்டல் விடுத்ததற்காக இரண்டு பேரை அகமதாபாத் குற்றப்பிரிவின் சைபர் செல் கைது செய்தது.


சினிமா - ஆஸ்கர் விருது 



  • சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை Guillermo del Toro’s Pinocchio படம் கைப்பற்றியது. 

  • 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை Everything Everywhere All at Once படத்திற்காக கீ க்யூ குவான் வென்றார்

  • ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை Everything Everywhere All at Once படத்திற்காக  நடிகை ஜேமி லீ கர்டிஸ்  வென்றார்.

  • ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்  சிறந்த ஆவணப்படமாக Navalny  தேர்வு

  • சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது “An Irish Goodbye” .


உலகம்:



  • இத்தாலியில் நடுக்கடலில் தவித்த 1,000 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

  • இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கான வாராந்திர பயணிகள் விமான சேவையை அதிகரிக்க ரஷ்யாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

  • அமெரிக்காவின் 16வது மிகப்பெரிய வங்கியான சிலிக்கான் வேலி வங்கி திவால் -முதலீட்டாளர்கள் அதிர்ச்சி


விளையாட்டு:



  • மகளிர் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

  • பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி சதம்  அடித்துள்ளார்.

  • உலக துப்பாக்கி சுடும் போட்டி: பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கம் வென்றார்

  • ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.