தமிழ்நாடு:



  • காவிரி விவகாரம் தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம். 

  • அரியலூர் அருகே தொழிற்சாலையில் பயங்கர விபத்து : நாட்டு வெடிகள் வெடித்து 12 பேர் உயிரிழப்பு - 12 பேர் படுகாயம்

  • வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி சந்திப்பு 

  • அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விபத்தில் கல்லூரி மாணவர் மற்றும் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • காவிரி ஆற்றில் செயற்கையான நெருக்கடியை கர்நாடகம் உருவாக்கி வருகிறது என்றும், காவிரியில் தண்ணீர் திறக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டும் ஸ்டாலின் பேசினார். 

  • அன்புமணி ராமதாஸ்க்கு  நடிகர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

  • சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

  • அக்டோபார் மாதம் 11ஆம் தேதி முதல் அதாவது நாளை வரை தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

  • மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு இன்று காலை 6.00 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. 


இந்தியா: 



  • தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.

  • நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு; பிரதமர் மோடியை வலியுறுத்தி காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்.

  • பதான், ஜவான் வெற்றி எதிரொலி - ஷாரூக்கானிற்கு கொலை மிரட்டல் வந்தநிலையில் ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்தது மகாராஷ்டிரா மாநில அரசு

  • இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் கேரளாவைச் சேர்ந்த ஷீஜா ஆனந்த் என்ற பெண் காயம் அடைந்துள்ளார்.

  • உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கிய நிலையில், இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்

  • மேற்கு வங்காளத்தில் கவர்னர் மாளிகை முன் நடந்த தர்ணா போராட்டம் வாபஸ் - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

  • பெங்களூருவில் ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்


உலகம்: 



  • இஸ்ரேல் போரை தொடங்கவில்லை; ஆனால் முடித்து வைக்கும் என பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை. 

  • பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று (அக்டோபர் 9) அறிவிக்கப்பட்டு, அமெரிக்காவைச் சேர்ந்த கிளாடியா கோல்டின்க்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

  • தெற்கு இஸ்ரேல் மீது அண்மையில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,100ஐ தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. 

  • ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 2,445 ஆக உயர்ந்துள்ளது.

  • ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க 3 லட்சம் வீரர்களை குவித்த இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.


விளையாட்டு: 



  • 2023 உலகக் கோப்பை போட்டி: இங்கிலாந்து - வங்காளதேசம் இன்று மோதல்

  • 2023 உலகக் கோப்பையின் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

  • 2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  • புரோ கபடி லீக் போட்டிக்கான ஏலத்தில் அதிகபட்சமாக ஈரான் அணியின் கேப்டன் ஷட்லோய் சியானேஷ் ரூ.2.35 கோடிக்கு ஏலம் போய் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். 

  • நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.