சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜை, வழிபாடுகள் நடந்து வருகிறது. சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது. உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதியும் நடக்கிறது.
இந்தநிலையில் பக்தர்களின் வருகை குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு இதுவரை 29 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. இதில் எருமேலி, அழுதக்கடவு காட்டுப் பாதையில் நடை பயணமாக சபரிமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 37,059 ஆகும்.
இந்த வழிப்பாதையில் சராசரியாக தினசரி 1,500 முதல் 2,500 வரை பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அதேநேரத்தில் வண்டிப்பெரியார், சத்ரம் புல்மேடு வழியாக இதுவரை 64,776 பக்தர்கள் சபரிமலைக்கு புனித பயணம் வந்துள்ளனர். இந்த பாதை வழியாக தினசரி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள்.
தற்போது சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 8-ந் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர். அதே போல் கடந்த மாதம் 24-ந் தேதி ஒரே நாளில் 1 லட்சத்து 867 பேர் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது என அதில் கூறப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் சபரிமலைக்கு வனப் பாதைகள் வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. சபரிமலைக்கு நடப்பு யாத்திரை காலத்தில் பாரம்பரிய வனப் பாதைகள் வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 1,02,338 பக்தர்கள் பல்வேறு வனப் பாதைகள் வழியாக சன்னிதானத்தை அடைந்துள்ளனர்.
இவர்களில், 37,059 பக்தர்கள் அழுதக்கடவு-பம்பை பாதையை பயன்படுத்தியுள்ளனர். இந்தப் பாதையில் தினமும் சராசரியாக 1,500 முதல் 2,500 பக்தர்கள் வந்துள்ளனர். மேலும் 64,776 பக்தர்கள் சத்திரம் பாதையை தேர்வு செய்துள்ளனர். இந்தப் பாதையில் தினமும் 4,000 முதல் 5,000 பக்தர்கள் வருகை தருகின்றனர். வரும் நாட்களில் வனப் பாதைகளைப் பயன்படுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த சீசனில் சபரியில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்துள்ளது. டிசம்பர் 13 வரை, பம்பை-சபரிமலை பாதை வழியாக மட்டும் 23,47,554 பக்தர்கள் வந்துள்ளனர். வனப் பாதைகள் வழியாக வந்தவர்களையும் சேர்த்தால் மொத்த வருகை 24 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது தினமும் சராசரியாக சுமார் 80,000 பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இந்த சீசனில் அதிகபட்சமாக டிசம்பர் 8-ம் தேதி 1,01,844 பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். இவ்வாறு தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.