ஆதித்யா எல் 1 விண்கலத்தில் இருக்கும் இரண்டாவது கருவி தற்போது செயல்படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் சூரியனின் மேல் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்ய உள்ளது. பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1-இல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும்.


அதன்பிறகு, அதில் உள்ள 7 கருவிகள் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ள உள்ளன.  இதற்கிடையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டபாதைகள் படிப்படியாக உயரத்தப்பட்டன. செப்டம்பர் 30 ஆம் தேதி பூமியில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது. 


இதற்கிடையில், அக்டோபர் 30ஆம் தேதி பூமியில் இருந்து அதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது.  இதனால், பூமியின் ஈர்ப்பு  விசை உள்ள பகுதியை விட்டு வெளியேறிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் குறித்த ஆய்வுக்காக லாக்ரோஞ்ச் எல்-1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது.


இப்படி தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் ஆதித்யா எல் 1 கடந்த மாதம் சூரிய கதிர்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது. ஆதித்யா எல் 1  விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி இதனை எடுத்துள்ளது.


இந்நிலையில் இஸ்ரோ தரப்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விண்கலத்தில் உள்ள 7 கருவிகளில் இரண்டாவது கருவி செயல்படத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. 2 நாட்களில் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியில் கைப்பற்றப்பட்ட புரோட்டான் மற்றும் ஆல்பா துகள் எண்ணிக்கையில் மாறுபாடுகளை ஹிஸ்டொகிராம் விளக்குகிறது. இப்படி சூரியனை நோக்கிய தனது பயணத்தில் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆரோக்கியமாக இருப்பதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.