தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தில் முகமூடி அணி வந்து வங்கி லாக்கரை உடைத்து ரூ. 4.15 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்களை உடைத்தும், வங்கியில் இருந்த அலராத்தின் ஒயர்களை அறுத்தும், கொள்ளையர்கள் தங்கள் கைவரிசைகளை காட்டியுள்ளனர். 


இந்த வங்கி கொள்ளை குறித்து 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நிஜாமாபாத் மாவட்டத்தில் மெண்டோரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புஸ்சாபூரில் தேசிய நெடுஞ்சாலை 44க்கு அருகில் அமைந்துள்ள தெலுங்கானா கிராமீனா வங்கியில் இருந்து சுமார் 4.15 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் மதிப்புள்ள பொருட்களை மாநிலங்களுக்கு இடையேயான கும்பல் ஒன்று பயங்கர கொள்ளையில் கொள்ளையடித்து சென்றது.


இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கொள்ளையர்கள் பெட்டகத்தை வெட்ட இரண்டு எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தி, ரூ. 4.15 கோடி மதிப்புள்ள 8.30 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ. 7.30 லட்சம் ரொக்கம் உட்பட பல மதிப்புமிக்க பொருட்களைக் கொள்ளையடித்ததாகத் தெரிகிறது.


கடந்த திங்கள்கிழமை காலை ஊழியர்கள் வேலைக்குத் திரும்பியபோது, வங்கியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், நாய்ப் படை மற்றும் துப்புக் குழுக்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குற்றவாளிகள் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை பயன்படுத்தியதாக சந்தேகிக்கிறோம். ஷட்டரை உடைத்து அதன் அருகில் இருந்த அலாரம் சிஸ்டத்தை முடக்கியதோடு, சிசி கேமராக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்” என போலீஸ் தெரிவிக்கின்றனர். 


மேலும், பல ஆவணங்கள் மற்றும் கரன்சி நோட்டுகள் எரிக்கப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட தங்கம் அனைத்தும் தங்கக் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களால் டெபாசிட் தங்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இது குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே நடந்த ஏடிஎம் திருடிய வழக்கில் இதே கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். "இந்த கும்பல் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம்களை குறிவைத்து குற்றத்தை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.


தொடர்ந்து காவல்துறை தரப்பில், "வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க ஆபரணங்கள், சுமார் ₹ 2.5 கோடி மற்றும் வேறு சில பணம் காணாமல் போனது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆறு அல்லது எட்டு பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்ததாக நாங்கள் சந்தேகிக்கிறோம், அவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டனர். 


குற்றம் நடந்த இடத்தில் இருந்து துப்புக் குழுவால் சேகரிக்கப்பட்ட பல கைரேகைகள் மற்றும் பிற பொருட்கள் குற்றவாளிகளை விரைவில் பிடிக்க வழிவகுக்கும். நிஜாமாபாத் போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும், நெடுஞ்சாலைகளில் உடல் ரீதியான சோதனைகளை நடத்தவும், குறிப்பாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த குற்றவாளிகளின் குற்றத் தரவுகளை ஆய்வு செய்யவும் சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர