மேற்கு வங்காளத்தின் கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தின் நந்தகுமார் காவல் நிலையத்தின் மன்சந்தோஷ் பகுதி ஆரம்பப் பள்ளியின் ஏழு ஆசிரியர்கள் தங்கள் மதிய உணவில் ஹில்சா மீன்களை வழங்கி மாணவர்களை ஆச்சரியப்படுத்தினர். துர்கா பூஜையை முன்னிட்டு மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்க ஆசிரியர்கள் தங்களின் சம்பளத்தில் இருந்து பணத்தை செலுத்தி 15 கிலோ ஹில்சா மீன்களை வாங்கிச் சென்றுள்ளனர்.


மொத்தம் 185 மாணவர்களுக்கு ஹில்சா மீன் வழங்கப்பட்டது. மதிய உணவில் மாணவர்களுக்கு ஹில்சா மீன் குழம்புடன் பூசணிக்காய் கறி மற்றும் சட்னி வழங்கப்பட்டது. வங்காளத்தில் விலையுயர்ந்த மீன்களில் ஒன்றாக கருதப்படும் ஹில்சா கடந்த இரண்டு ஆண்டுகளாக சந்தையில் அதிகம் கிடைக்கவில்லை. எனவே, தொற்றுநோய்க்குப் பிந்தைய ஹில்சா மீனின் விலை மிகவும் உயர்ந்திருந்தது.




பள்ளியின் தலைமையாசிரியர் மற்ற ஆசிரியர்களுடன் சேர்ந்து மாணவர்களுக்கு மதிய உணவில் ஹில்சா மீன்களைத் தர ஏற்பாடு செய்ததாக மன்சந்தோஷ் பகுதி ஆரம்பப் பள்ளியின் உதவி ஆசிரியர் சுஷாந்த் குமார் பெரா கூறினார். “நாங்கள் பெரும்பாலான நாட்களை பள்ளியில் செலவிடுகிறோம். எனவே ஒரு நாளைக்கு மதிய உணவு மெனுவை மாற்றுவதன் மூலம் அவர்களை மகிழ்விக்க முடியுமா என்று நாங்கள் நினைத்தோம், எனவே துர்கா பூஜைக்கு முன் அவர்களுக்கு ஹில்சா மீன்களை வழங்க ஏற்பாடு செய்தோம்" என்று பெரா மேலும் கூறினார்.


மெனுவில் இந்த புதிய ஐட்டம் கிடைத்ததால் மிகுந்த உற்சாகமடைந்த பள்ளி மாணவர் ஒருவர், “மற்ற நாட்களில் காய்கறி, மீன் அல்லது முட்டை சாப்பிடுவோம். ஆனால் இன்று, ஆசிரியர்கள் அனைவரும் எங்களை ஹில்சா மீன் சாப்பிட வைத்தனர். எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஹில்சா மீனுடன் உருளைக்கிழங்கு கறி மற்றும் சட்னியும் இருந்தது" என்றார்.


2015 ஆம் ஆண்டில், இந்த பள்ளி நிர்மல் வித்யாலயா விருதைப் பெற்றது. இப்பள்ளியில் மழலையர் பள்ளி முதல் 4ம் வகுப்பு வரை மாணவர்கள் உள்ளனர். பள்ளியில் கணினி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.


முன்னதாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மதிய உணவு குறித்து பல புகார்கள் வந்துள்ளன. சில மாணவர்கள் உணவில் பூச்சிகள் காணப்படுவதாகவும், மற்றவர்கள் உணவில் பல்லி மற்றும் பாம்புகளின் அழுக்குகள் இருப்பதாகக் கூறுகின்றனர். பல சமயங்களில் அந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு குழந்தைகள் நோய்வாய்ப்படுகிறார்கள். மேற்கு வங்கத்தில் பல இடங்களில், சுகாதாரமற்ற உணவு வழங்குவதாகக் கூறி அங்கன்வாடி மையத்தின் முன் உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்தினர். மேலும் பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் மாற்றம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.


இந்த மாத தொடக்கத்தில், மேற்கு வங்கத்தின் வடக்கு தினாஜ்பூரில் உள்ள அரசு நடத்தும் தொடக்கப் பள்ளியில் குறைந்தபட்சம் 12 பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்ட பிறகு நோய்வாய்ப்பட்டனர். அப்போது சமையல்காரர் உணவில் உப்புக்குப் பதிலாக சோப்புப் பொடியை தவறுதலாக கலக்கியது தெரியவந்தது. சனிக்கிழமை பிற்பகல் இட்டாஹார் கிராமத்தில் உள்ள சிலிம்பூர் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் இந்தச் சம்பவம் நடந்தது. குழந்தைகளுக்கு மதிய உணவாக ‘கிச்சுரி’ கொடுக்கப்பட்டது, ஆனால் அவர்கள் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர், உடனடியாக இட்டாஹார் கிராமப்புற மருத்துவமனைக்கு அவர்கள்  மாற்றப்பட்டனர்.