Breaking News LIVE Today: தமிழ்நாட்டில் இன்று 1,051 நபர்களுக்கு புதியதாக கொரோனா...!

Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 20 Feb 2022 07:24 PM
தமிழ்நாட்டில் இன்று 1,051 நபர்களுக்கு புதியதாக கொரோனா...!

தமிழ்நாட்டில் இன்று புதியதாக 1,051 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 18 ஆயிரத்து 164 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் இன்று 3 ஆயிரத்து 561 நபர்கள் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு கொரோனா தொற்று !

இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 95வயதான இவருக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் - 5 மணி நிலவரப்படி 63.44% வாக்குகள் பதிவு

ஒரே கட்டமாக நடைபெறும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.44% வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்டமாக நடைபெறும் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.44% வாக்குகள் பதிவாகியுள்ளன.

உக்ரைன் பதற்றம்- இந்திய தூதரகம் எச்சரிக்கை !

உக்ரைன்-ரஷ்யா இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 5 வார்டுகளில் நாளை மறுவாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஒகேனக்கல் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால், ஞாயிறு விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையாவது முறையாக இருக்கட்டும் - ஈ.பி.எஸ்

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையாவது முறையாக இருக்கட்டும் - ஈ.பி.எஸ்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு..

அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை இரு தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணிநேரத்துக்கு தென் தமிழகம், திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

உள்ளாட்சித் தேர்தலில் விதிமீறல்கள் : மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை - ஈ.பி.எஸ்

உள்ளாட்சித் தேர்தலில் விதிமீறல்கள் : சென்னை, கோவையில் அதிகளவில் வன்முறைகள் நடந்துள்ளன. சென்னை மாநகராட்சியில் பல வார்டுகளில் சிலர் கள்ள ஓட்டுக்கள் போட்டுள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியில் கள்ள ஓட்டுப்போட முயன்றவர்களைத் தடுத்த காவல்துறையினருக்கு மிரட்டல். மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை - ஈ.பி.எஸ்

ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றவரா? பணியாளர் தேர்வாணையத்தில் 5500 காலிப்பணிகள்.. உடனே விண்ணப்பிக்கவும்..

தற்போதைய அறிவிப்பின்படி, சுமார் 5000 காலிப் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.


பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குப் பதிவு செய்ய ssc.nic.in என்ற Staff Selection Commissionனின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் காணலாம். 

சென்னையில் இந்த ஆண்டு இதுவரை, 23 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை..

சென்னையில் இந்த ஆண்டு இதுவரை, 23 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

உத்தரபிரதேசத்தை பாதுகாப்பான, கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவோம் - அமித்ஷா

உத்தரபிரதேசத்தை பாதுகாப்பான, கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவோம் - அமித்ஷா

சூர்யாவின் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் நடிக்கிறார் அக்‌ஷய் குமார்.

சூர்யாவின் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் நடிக்கிறார் அக்‌ஷய் குமார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் இதுவரை 175.35 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன..

இந்தியாவில் இதுவரை 175.35 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன..

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் : 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் : 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

தேர்தல் பணிக்கு சென்றிருந்த ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் கிராமத்தில், நளினிபாய்  என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.


 இவர் நேற்று தேர்தல் பணிக்கு சென்ற நிலையில், இவர் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 சவரன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வெள்ளி கொலுசு திருடி சென்றுள்ளனர்.


 இது குறித்து சித்தாமூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் 46 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சியில் 29 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள்..

உத்தரப்பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் 3ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 627 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் 245 வேட்பாளர்கள் 1 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளனர். இந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதிகபட்சமாக சமாஜ்வாதி சார்பில் 52 வேட்பாளர்களும், பாஜக சார்பில் 48 பேரும் இடம்பெற்றுள்ளனர். 


அதேபோல், பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் 46 பேரும், காங்கிரஸ் கட்சியில் 29, ஆம் ஆத்மி கட்சியில் 18 பேரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

உபி தேர்தல் : மொத்த 627 பேர் மொத்தம் களத்தில் உள்ளனர்..

உபி தேர்தல் : மொத்த 627 பேர் மொத்தம் களத்தில் உள்ளனர். மொத்த வேட்பாளர்களில் 245 பேர் கோடீஸ்வரர்கள்..

வேளாண் பயன்பாட்டுக்காக 100 ட்ரோன்கள் அறிமுகம்

வேளாண் பயன்பாட்டுக்காக 100 ட்ரோன்கள் அறிமுகம் - இணைய வழியில் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

உபி தேர்தல் : கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் பாஜகவினர் எத்தனை பேர்?

உபி தேர்தல் : கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் அதிகபட்சமாக சமாஜ்வாதி கட்சியிலிருந்து 52 பேரும், பாஜகவின் 48 பேரும் உள்ளனர்

உபி தேர்தல் : மூன்றாம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் 245 வேட்பாளர்களுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சொத்துக்கள் உள்ளன.

உபி தேர்தல் : மூன்றாம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் 245 வேட்பாளர்களுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சொத்துக்கள் உள்ளன.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் களமிறங்கிய தொகுதியில் இன்று வாக்குப்பதிவு

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் களமிறங்கியுள்ள கர்ஹால் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு

உத்தர பிரதேசத்தில் 3 ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..!

உத்தர பிரதேசத்தில் 3 ம் கட்டமாக 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. 

Background

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், மாவட்ட வாரியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் வெளியாகியுள்ளது.


அதன்படி, தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அவற்றில் பேரூராட்சிகள் 74.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நகராட்சி பகுதிகளில் 68.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 52.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.


தமிழ்நாட்டிலே அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பேரூராட்சியில் 80.14 சதவீத வாக்குகளும், நகராட்சியில் 81.37 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 43.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.


1.அரியலூர் – 75.69 சதவீதம்


2.செங்கல்பட்டு – 55.30 சதவீதம்


3.சென்னை – 43.59 சதவீதம்


4. கோவை – 59.61 சதவீதம்


5.கடலூர் – 71.53 சதவீதம்


6. தர்மபுரி – 80.49 சதவீதம்


7.திண்டுக்கல் – 70.65 சதவீதம்


8. ஈரோடு – 70.73 சதவீதம்


9. கள்ளக்குறிச்சி – 74.36 சதவீதம்


10. காஞ்சிபுரம் – 66.82 சதவீதம்


11. கன்னியாகுமரி – 65.72 சதவீதம்


12. கரூர் – 76.34 சதவீதம்


13. கிருஷ்ணகிரி – 68.52 சதவீதம்


14.மதுரை – 57.09 சதவீதம்


15.மயிலாடுதுறை – 65.77 சதவீதம்


16.நாகப்பட்டினம் – 69.19 சதவீதம்


17.நாமக்கல் – 76.86 சதவீதம்


18.பெரம்பலூர் – 69.11 சதவீதம்


19. புதுக்கோட்டை – 69.61 சதவீதம்


20. ராமநாதபுரம் – 68.03 சதவீதம்


21. ராணிப்பேட்டை – 72.24 சதவீதம்


22. சேலம் – 70.54 சதவீதம்


23. சிவகங்கை – 67.19 சதவீதம்


24. தென்காசி – 70.40 சதவீதம்


25. தஞ்சை – 66.12 சதவீதம்


26.தேனி – 68.94 சதவீதம்


27. நீலகிரி – 62.68 சதவீதம்


28. தூத்துக்குடி – 63.81 சதவீதம்


29. திருச்சி – 61.36 சதவீதம்


30.திருநெல்வேலி – 59.65 சதவீதம்


31. திருப்பத்தூர் – 68.56 சதவீதம்


32. திருவள்ளூர் – 65.61 சதவீதம்


33.திருவண்ணாமலை – 73.46 சதவீதம்


34.திருவாரூர் – 66.25 சதவீதம்


35. வேலூர் – 66.68 சதவீதம்


36. விழுப்புரம் – 72.39 சதவீதம்


37.விருதுநகர் 69.24 சதவீதம்


38.திருப்பூர் – 60.66 சதவீதம்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.