தமிழ்நாடு:



  • சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நாளை பதவியேற்பு: ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

  • பொம்மை முதலமைச்சராக இருக்கிறார் ரங்கசாமி; புதுவையிலும் திராவிட மாடல் ஆட்சி நிச்சயம் உதயமாகும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதி

  • வடகிழக்கு பருவமழை தீவிரம்; 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

  • கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

  • மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-5 ஏ (Group-5a) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

  • பொங்கல் பரிசு வழங்குவது அரசின் கொள்கை ரீதியான முடிவு என தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.


இந்தியா:



  • பிரதமர் மோடி முன்னிலையைல் குஜராத் முதலமைச்சராஅ பூபேந்திர படேல் பதவியேற்பு: 16 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

  • பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ரூபாய் பதிப்பு சரிவு; மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்- எதிர்களுக்கு பொறாமை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றசாட்டு 

  • சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு; கோயில் நடை 19 மணி நேரம் திறக்க நடவடிக்கை - பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

  • உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தீபாங்கர் தத்தா (Dipankar Datta ) பொறுப்பேற்றுக் கொண்டார்.

  • பாராளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், குடியுரிமையை துறந்தவர்கள் பட்டியல் குறித்து தெரிவித்துள்ளார்.


உலகம்:



  • தென் அமெரிக்க நாடான பெருவில் வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. இந்த வன்முறையில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் அதன் விளைவாக விமான நிலையம் மூடப்பட்டதாகவும் அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.94 கோடியாக உயர்வு

  • ஆப்கானிஸ்தான்: காபூலில் உள்ள ஓட்டல் அருகே துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

  • இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


விளையாட்டு:



  • புரோ கபடி லீக்: வெளியேற்றுதல் சுற்றில் உ.பி. அணியுடன் தமிழ் தலைவாஸ் இன்று மோதல்

  • 17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

  • உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் இன்றைய அரையிறுதிப் போட்டியில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி குரோஷியாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.