Tamil Nadu Coronavirus LIVE News : தடுப்பூசி கோரிய உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

June 6 Covid-19 Live News Updates: தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 06 Jun 2021 09:03 PM

Background

Tamil Nadu Coronavirus Latets News Live Updates: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்  21,140 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதில், அதிகபட்சமாக கோயம்பத்தூர் மாவட்டத்தில் 2663 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், 32,472 பேர் கொரோனா...More

தடுப்பூசி கோரிய உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நீலகிரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்கள் அவர்களே தடுப்பூசியை வாங்கிக்கொள்ள உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் நேற்றோடு நிறைவு பெற்றது. இதில் யாரும் பங்கேற்காததால் மறு டெண்டர் விடுத்து, தடுப்பூசியை நாமே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என தொழில்துறை அமைச்சர் டெல்லிக்கு சென்று தொடர்புடைய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. கால அவகாசம் கேட்டுள்ளனர். பயோடெக் நிறுவனத்தினரும் ஆய்வு செய்துள்ளனர். இதில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.