டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது. குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட இருந்த நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை மீற இருந்த மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.