Gandhi Controversy: ”மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத்தந்தை” இந்தியாவிற்கு அல்ல - வெடித்த புதிய சர்ச்சை

Gandhi Controversy: மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத்தந்தை என, பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Continues below advertisement

Gandhi Controversy: மகாத்மா காந்தி தான் பாகிஸ்தான் உருவாக காரணமாக இருந்தார் என, பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

”காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத்தந்தை”

போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா, “இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் மகாத்மா காந்தியை விட பெரியவர். மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை என்றால், ஆர்.டி.பர்மன் இசை உலகில் தேசத்தின் தந்தை. மேலும், மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை, இந்தியாவிற்கு அல்ல. இந்தியா ஏற்கனவே இருந்தது, பின்னர் இந்தியாவிலிருந்து தான் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. காந்தி இந்தியாவின் தேசத் தந்தை என்று தவறாக அழைக்கப்பட்டார். பாகிஸ்தான் நாடு இருப்பதற்கு காரணமானவர் அவர்தான்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

”சல்மான் கான் அவ்ளோ பெரிய ஆள் இல்லை”

ஆரம்ப நாட்களில் சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் போன்ற பல நடிகளுக்கு இவர் டப்பிங் பேசியுள்ளார். ஆனால், தற்போது அவர்களுடன் பல்வேறு முரண்பட்ட கருத்துகளை கொண்டுள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு, “ஷாருக்கான் அடுத்த லெவலில் இருக்கிறார். அதேநேரம், நான் பேசக்கூடிய அளவிலான தகுதி சல்மான் கானிற்கு இல்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

குவியும் கண்டனங்கள்

அபிஜித்தின் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை புயலையே கிளப்பிவிட்டுள்ளது. நெட்டிசன்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் காந்தியின் தலைமைத்துவத்திற்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்டதால், அகிம்சையை ஊக்குவித்து, உலகளாவிய சிவில் உரிமை முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்த கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை ஈர்த்துள்ளன.

யார் இந்த அபிஜித்?

மெல்லிசைக் குரலுக்கு பெயர் பெற்ற அபிஜித், 1990களில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு சின்னச் சின்ன பாடல்களை வழங்கி, ஒரு முக்கிய பின்னணி பாடகரானார். ஜதின்-லலித் இசையமைத்த வாதா ரஹா சனம், குத் கோ க்யா சமாஜ்தி ஹை மற்றும் க்யா கபர் தி ஜானா போன்ற வெற்றிப் பாடல்களைப் பாடிய அவருக்கு,  1992 ஆம் ஆண்டு வெளியான கிலாடி திரைப்படத்தின் மூலம் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது.  பல ஆண்டுகளாக, அவர் அமீர் கான், சல்மான் கான், சைஃப் அலி கான், அக்‌ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் மற்றும் ரன்பீர் கபூர் போன்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்தார். 1990 களில் திரைப்படங்களுக்கு அவர் அளித்த பங்களிப்புகள் பாலிவுட்டின் வெற்றிகரமான பின்னணிப் பாடகர்களில் ஒருவராக அவரது அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. 

ஆர்.டி.பர்மனுடனான தொடர்பு 

புகழ்பெற்ற இசையமைப்பாளரான பர்மன், பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவுடன் இணைந்து பாடிய டூயட் பாடுவதன் மூலம் பெங்காலி திரைப்படத்தில் அபிஜித்தை அறிமுகப்படுத்தினார். அவரது திரைபயணத்தின் ஆரம்ப கட்டத்தில், அபிஜீத் பர்மனுடன் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இது அவரது இசை வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola