Sikkim Flood: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.


புரட்டி போட்ட கனமழை:


வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரிப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மேகம் வெடிப்பால் கனமழை கொட்டியது. தொடர்ந்து, சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், நீர்மட்டம் திடீரென 15-20 அடி உயரத்திற்கு உயர்ந்தது. இதனால்,  லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளாத்தாக்குப் பகுதியில் இருந்த ராணுவ வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளது. மேலும், மரங்கள், வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதோடு, 14 பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. சிக்கிமின் சுங்தாங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.  


மற்ற பகுதிகளைக் காட்டிலும் 80 சதவீதம் சுங்தாங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீஸ்டா நதி பாயும் வடங்கு வடக்கு வங்கத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தால் மங்கன், கேங்டாக், பாக்யோங் மற்றும் நாம்ச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அக்டோபர் 8ஆம் தேதி மூடப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.


14 பேர் உயிரிழப்பு:


சிக்கிம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளனர். ஏற்கனவே உயிரிழப்பு எண்ணிக்கை 8ஆக இருந்த நிலையில், தற்போது 14ஆக உயர்ந்துள்ளது. மேலும், 22 ராணுவ வீரர்கள் உட்பட 102 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டார் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 22,034 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கி 2,011 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.






வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினரும், எல்லை சாலை அமைப்பினுரும் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவக்ர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,025 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நான்கு மாவட்டங்களில் சுமார் 26 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பான இடங்களில் மக்கள் தஞ்சம் அடைய வேண்டும் என்றும் முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவுறுத்தியுள்ளார்.  இதற்கிடையில், சிக்கிம் அரசு உதவிக்கு ஹெல்ப்லைன் எண்களையும் வெளியிட்டிருக்கிறது. கிழக்கு சிக்கிமிற்கான உதவி எண் - 8756991895, வடக்கு சிக்கிமிற்கான உதவி எண் - 8750887741 மற்றும் 7588302011 என்ற எண்களை வெளியிடப்பட்டுள்ளது.




மேலும் படிக்க


Annamalai: "யார் போனாலும் வருத்தம் இல்லை; 2024ல் தெரியும்" - அதிமுக கூட்டணி முறிவு குறித்து அண்ணாமலை பளீச்!