தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வர் ரங்கசாமி அழைக்காததால் புதுச்சேரி மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட உள்ளதாக புதுச்சேரி மாநில பாமக செயலர் தன்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தன்ராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டபேரவைத் தேர்தலில் பாமக தேசிய ஜனநாயக  கூட்டணியில் அங்கம் வகித்தது. இந்த  கூட்டணி தொடர்ந்து வரும் நிலையில் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பத்தாண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், இது முறையாக நடத்தப்படுமா என பொதுமக்களுக்கு ஐயம் எழுந்துள்ளது.


kanchipuram: கிராமத்திற்கு திடீரென விரைந்த மருத்துவர்கள்..நடந்தது என்ன?



கடந்த சட்டபேரவைத் தேர்தலில் பாமக பத்து இடங்களில் தனித்து போட்டியிடும் என அறிவித்த நிலையில் கூட்டணி கட்சியினர் கேட்டுக் கொண்டதன் பேரில் நாங்கள் போட்டியிடாமல், கூட்டணிக்காக உழைத்தோம். உள்ளாட்சித் தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டணியின் தலைவர் என்ற முறையில் முதல்வர் ரங்கசாமி பாமகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.


பாமக குறித்து அவர்கள் எதுவும் பேசவில்லை என எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இது ஒரு சந்தர்ப்பவாத செயல்பாடு. இந்த சூழலில் நாங்கள் கடைசி வரை காத்திருக்காமல் தேர்தல் பணியில் இப்போதே இறங்கி இருக்கிறோம். இன்று முதல் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களிடம் விருப்ப மனு பெற தொடங்கி இருக்கிறோம். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களுக்கும் பாமக தனித்து போட்டியிட முடிவு எடுத்துள்ளோம். இது குறித்து உயர்மட்ட குழு கூடி ஆலோசித்து தலைமைக்கு தெரிவித்து இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி பாமகவை முறையாக அழைக்காத காரணத்தால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். என்று புதுச்சேரி  மாநிலச் செயலர் தன்ராஜ் கூறினார்.



SA Chandrasekar Speech: எனக்கும் விஜய்க்கும் சண்டை தான்..மீண்டும் சொன்ன SAC


மேலும், புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் கூட்டணி, இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சட்டப்பேரவைத் தேர்தலில் அமைந்த கூட்டணியே தொடரும் என்று ஆளும்கட்சி தரப்பும், எதிர்க்கட்சித் தரப்பும் தெரிவித்தன. அதில் இட பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி தலைமையில் நடந்து முடிந்துள்ளது. இதில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ருத்ரதாண்டவத்தை கிறிஸ்துவர்கள் கொண்டாடுவாங்க- வேலூர் இப்ராஹிம்