நாட்டில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதில், தமிழ்நாட்டை தவிர, பிற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.




 


இந்நிலையில், டெல்லியில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால், டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட  வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.