SC on Oxygen Crisis: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி... ஆனால், ஆக்சிஜனில் தமிழகத்துக்கு முன்னுரிமை இல்லை

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் தமிழ்நாட்டுக்கு உரிமையில்லை என்று கூறியுள்ளது.

Continues below advertisement

ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Continues below advertisement

ஆக்சிஜன் உற்பத்தியை செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்திய தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று நீதியமன்றம் யோசனை கொடுத்திருந்தது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக  தமிழக அரசு நேற்று அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தியது. இதில், ஆக்ஸிஜன் உற்பதிக்கு மட்டும் ஆலையை திறக்கலாம் என்று கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் ஒத்துக்கொண்டதை அடுத்து, ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாதங்களுக்கு ஆலையை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 


இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க கோரிய வேதாந்தாவின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து நீதிமன்றம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலையை இயக்க வேண்டும்; வேறு தேவைக்காக ஆலையை இயக்கக்கூடாது என தெரிவித்த நீதிமன்றம், ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசிடம்தான் கொடுக்க வேண்டும் என்றும், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசுதான் பிரித்து கொடுக்கும் என்றும் கூறியது. ஸ்டெர்லைட் ஆக்சிஜனில் தமிழகத்துக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது என மத்திய அரசு கூறியதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்தது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Supreme Court allows Vedanta to operate oxygen production unit at its Sterlite copper plant in Tuticorin, in Tamil Nadu, on a stand-alone basis.<br><br>&quot;The plant shall be operated &amp; only produce oxygen &amp; for no other purpose,&quot; says Justice DY Chandrachud. <a >pic.twitter.com/TbXMU2YYnx</a></p>&mdash; ANI (@ANI) <a >April 27, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தேவையான மின்சாரத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டது.

Continues below advertisement