2020ஆம் ஆண்டில், விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, 22 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளதாக மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நேற்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளில் 22 செயற்கைக்கோள்கள்:

கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர், பதிவு செய்யப்பட்ட விண்வெளி புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை விரைவாக 300-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு, மே மாதம் வரை, இந்திய விண்வெளி புத்தொழில்  நிறுவனங்களிலிருந்து இரண்டு வெற்றிகரமான துணை சுற்றுப்பாதை விமானங்களை எளிதாக்கியுள்ளது.

இஸ்ரோ படைத்த சாதனை:

கூடுதலாக, ஆறு அரசு சாரா நிறுவனங்கள் பதினான்கு செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்தி, அவற்றின் திறன்களை நிரூபித்துள்ளன. விண்வெளித் துறை சீர்திருத்தங்களின் தாக்கத்தை அளவிடுவதற்கான மற்றொரு அளவுரு, வசதி மற்றும் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையாகும்.

இன்-ஸ்பேஸ்  பல்வேறு நடவடிக்கைகளுக்காக 380 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து  மொத்தம் 658 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. இந்தாண்டு, மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, விண்வெளித் துறை சீர்திருத்தங்களுக்குப் பிறகு 77 அங்கீகாரங்களை இன்-ஸ்பேஸ் வழங்கியுள்ளது.

 

79 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 31 தரவு பரப்புபவர்களுக்கு 59 பதிவுச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது. 91 கூட்டாகச் செயல்படுத்தல் திட்டங்கள் மற்றும் 79 தொழில்நுட்ப ஒப்பந்தங்கள்  கையெழுத்திடப்பட்டுள்ளன என அமைச்சர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி