இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, மகாராஷ்ட்டிரா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநிலங்கள் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதித்து வருகின்றன.


மகாராஷ்டிராவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலாகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதே கொரோனா அதிகரிப்பதற்கான காரணமாக உள்ளது.


இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதன் எதிரொலியாக, டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதன்படி,திருமண நிகழ்வுகளில் 100 முதல் 200 பேர் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.