மத்திய சுகாதாத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாட்டில் ஒரே நாளில் 62,714 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், “இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,08,910-இல் இருந்து 1,19,71,624-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 312 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,61,240-இல் இருந்து 1,61,552-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 28,739 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,12,95,023-இல் இருந்து 1,13, 23,762-ஆக உள்ளது. இதுவரை 6,02,69,782 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.