மகாராஷ்டிரா சட்டபேரவையின் புதிய சட்டபேரவை தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


சபாநாயகர் தேர்தலில் சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக சேனா எம்எல்ஏவும் உத்தவ் தாக்கரேவின் விசுவாசியுமான ராஜன் சால்வியும், முதல் முறையாக பாஜக எம்எல்ஏ-வான ராகுல் நர்வேகரும் போட்டியிட்டனர். 


பாஜக எம்எல்ஏ-வான ராகுல் நர்வேகர் 160-க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றதன் மூலம் மகாராஷ்டிராவின் சட்டபேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


முன்னதாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை கட்சியில் இருந்து "கட்சி விரோத நடவடிக்கைகளில்" ஈடுபட்டதற்காக நீக்கம் செய்தார். அந்த கடித்ததில், "சிவசேனா கட்சித் தலைவராக எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கட்சி அமைப்பின் சிவசேனா தலைவர் பதவியில் இருந்து உங்களை நீக்குகிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார். 


மகாராஷ்டிர முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டே, ஜூலை 4 ம் தேதியான நாளை (திங்கள்கிழமை) மாநில சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மகாராஷ்டிரா சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் இன்றும் ஜூலை 4ம் தேதியும் நடக்கிறது.


நம்பிக்கை தீர்மானம் :


ஷிண்டேவை ஆதரிக்கும் அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கோவாவில் இருந்து சனிக்கிழமை மாலை மும்பைக்குத் திரும்பி, தெற்கு மும்பையில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். NCP தலைவர் சரத் பவார், தனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருந்தாலும், துணை சபாநாயகரான நர்ஹரி ஷிர்வால் சபாநாயகரின் பணியை செய்ய முடியும் என்று கூறினார். காங்கிரசை சேர்ந்த நானா படோலே ராஜினாமா செய்ததையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல் சபாநாயகர் பதவி காலியாக உள்ளது.


சிவசேனாவின் 39 கிளர்ச்சி எம்எல்ஏக்கள் உட்பட ஷிண்டேவை ஆதரிக்கும் 50 எம்எல்ஏக்கள் சனிக்கிழமை மாலை கோவாவில் இருந்து வாடகை விமானம் மூலம் மும்பை சென்றனர். காலையில் கோவாவுக்குச் சென்ற ஷிண்டே அவர்களுடன் திரும்பிச் சென்றார்.


288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஷிண்டேவுக்கு சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் 10 எம்எல்ஏக்கள் மற்றும் பாஜகவின் 106 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.


சட்டமன்றத்தில் கட்சியின் நிலை பின்வருமாறு: சிவசேனா 55, என்சிபி 53, காங்கிரஸ் 44, பாஜக 106, பகுஜன் விகாஸ் அகாடி 3, சமாஜ்வாதி கட்சி 2, ஏஐஎம்ஐஎம் 2, பிரஹர் ஜனசக்தி கட்சி 2, எம்என்எஸ் 1, சிபிஐ (எம்) 1, பிடபிள்யூபி 1 , ஸ்வாம்பிமணி பக்ஷா 1, ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா 1, ஜான்சுராஜ்ய சக்தி கட்சி 1, கிராந்திகாரி ஷேத்காரி கட்சி 1, மற்றும் சுயேச்சைகள் 13.


கடந்த மாதம் சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கே மரணம் அடைந்ததால் அந்த இடம் காலியாக உள்ளது. இரண்டு என்சிபி உறுப்பினர்கள் - துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் சகன் புஜ்பால் - கோவிட் -19 நேர்மறை சோதனை செய்துள்ளனர், அதே நேரத்தில் மற்ற இரண்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் - அனில் தேஷ்முக் மற்றும் நவாப் மாலிக் - தற்போது சிறையில் உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண