கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை பயணத்தை இன்று ராகுல் காந்தி தொடக்கி வைத்து அதில் பங்கேற்கிறார்.






இந்த பயணத்திற்கு முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி இன்று காலை  மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்துக்கு வருகை புரிந்து மரியாதை செலுத்தினார்.






பின்னர், தந்தையின் நினைவிடத்தில் தியானம் செய்த ராகுல் காந்தி,  சென்னை திரும்பி, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு ஒற்றுமைப் பயணத்தை தொடங்குகிறார். இந்த பயணத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 


கன்னியாகுமரியில் தொடங்கி ஸ்ரீீநகர் வரையில் நடைபெறவுள்ள இந்த பயணம் 150 நாட்கள் நடைபயணமாக திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களின் வழியாக 3,570 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகிறது.


ராகுல் காந்தி பாதயாத்திரை:

 

மத்திய பாஜக அரசின் தவறான அரசியல், சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாகவும் விலைவாசி ஏற்றம், பொருளாதார சீர்கேடு ஆகியவற்றை விளக்கி கூறும் விதமாகவும் நாடு முழுவதும் ராகுல் காந்தி பாதயாத்திரை திட்டமிட்டார்.அந்த வகையில் இந்த மாபெரும் பாத யாத்திரையை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இன்று தொடங்குகிறார்.

 





அதன்படி, சுசீந்திரத்தில் இருந்து களியக்காவிளைக்கு சுமார் 65 கிலோ மீட்டர் தூரம் எனவே 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. களியக்காவிளையில் இருந்து கேரள மாநிலத்திற்கு பாத யாத்திரை செல்கிறார்.பின்னர் அவரது தொகுதி யான வயநாட்டிலும் பாத யாத்திரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 16 மாநிலங்களில் 3500 கிலோமீட்டர் தூரம் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.