சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் நேற்று முன்தினம் இரவு பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், 22 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், மேலும், 31 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும், இந்த தாக்குதலில் 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.


இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்ததோடு, வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.




இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு இன்று நேரில் சென்று பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜக்தல்பூரில் வைக்கப்பட்டுள்ள வீரர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அம்மாநில முதல்வர் பாகலும் அஞ்சலி செலுத்தினார். மாவோயிஸ்ட் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.






<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">No Indian jawan should face an enemy without body armour in the 21st century. <br><br>It needs to be made available to every soldier.</p>&mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a >April 5, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


இந்நிலையில், நமது ராணுவ வீரர்கள் உடல் கவசம் இல்லாமல் எதிரியை எதிர்கொள்ளக்கூடாது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘21ஆம் நூற்றாண்டில் அனைத்து இந்திய ராணுவ வீரர்களும் உடல் கவசம் இல்லாமல் எதிரியை எதிர்கொள்ளக்கூடாது. இது ஒவ்வொரு இந்திய ராணுவ வீரர்களுக்கும் கிடைக்க வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.