Rahulgandhi: 18 ஆண்டுகளுக்கு பிறகு.. அரசு பங்களாவை ஒப்படைக்கும் ராகுல்காந்தி...! அடுத்து எங்கு வசிக்க போகிறார் தெரியுமா..?

தற்போதைக்கு ராகுல் காந்திக்கு இருக்கும் ஒரே வழி, குஜராத் உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்வதுதான்.

Continues below advertisement

கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

Continues below advertisement

இரண்டு ஆண்டுகள் சிறை:

ராகுல் காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் அரசு பங்களாவில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய குஜராத் நீதிமன்றத்திற்கு 30 நாட்கள் அவகாசம் அளித்தது. 

ஆனால், தண்டனையை நிறுத்த வைக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், ராகுல் காந்தியால் தற்போதைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.

அரசு பங்களாவை காலி செய்யும் ராகுல்காந்தி:

இந்நிலையில், டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து, அதை மக்களவை செயலகத்திடம் இன்று ஒப்படைக்க உள்ளார் ராகுல் காந்தி. முன்னதாக, லாரி டிரக்கை கொண்டு அரசு பங்களாவில் இருந்த ராகுல் காந்தியின் பொருள்கள் எடுத்து செல்லப்பட்டது. ராகுல் காந்தியின் பொருள்கள் அனைத்தும் அவரது தாயார் சோனியா காந்தியின் வீட்டுக்கு மாற்றப்பட்டது.

12 துக்ளக் லேனில் உள்ள இந்த பங்களாவில்தான் ராகுல் காந்தி கடந்த 2005ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். அரசு பங்களாவை காலி செய்வதில் இருந்து நீட்டிப்பு கேட்டு நாடாளுமன்ற வீட்டுவசதி கமிட்டியிடம் ராகுல் காந்தி கடிதம் எழுதியிருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். 

அப்படி கடிதம் எழுதியிருக்கும் பட்சத்தில் நீட்டிப்புக்கு அளிக்கப்பட்டுள்ள காரணத்தை ஆராய்ந்து நீட்டிப்பு வழங்கலாமா? அல்லது வேண்டாமா? என்ற முடிவை அந்த கமிட்டி எடுத்திருக்கும். பாஜக எம்பி சி.ஆர். பாட்டீல் தலைமையிலான நாடாளுமன்ற வீட்டுவசதி கமிட்டியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இருக்கின்றனர். ஆனால், காலி செய்வதில் இருந்து நீட்டிப்பு கேட்காமல் அரசு பங்களாவை காலி செய்துள்ளார் ராகுல் காந்தி.

தற்போதைக்கு ராகுல் காந்திக்கு இருக்கும் ஒரே வழி, குஜராத் உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்வதுதான்.

மேலும் படிக்க: Watch Video: "பல்லு தேய்க்க வேற இடமே கிடைக்கலயா உனக்கு..?" ஓடும் மெட்ரோவில் ப்ரஷ் செய்த இளைஞர்...!

Continues below advertisement
Sponsored Links by Taboola