கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் இன்று காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.. உடற்பயிற்சி செய்யும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் முதலுதவிக்குப் பிறகு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டார். அதிர்ச்சியூட்டும் அவரது மரணத்தை அடுத்து டிவிட்டரில் பல்வேறு மொழி நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது இரங்கலில்,புனித் ராஜ்குமார் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.






நடிகர்களிடையே செல்லமாக அப்பு என அறியப்பட்ட புனித் ராஜ்குமார் இறப்பு மனதை நொறுக்குவதாக இருப்பதாக பலர் ட்வீட் செய்து வருகின்றனர். 






நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்வீட்டில் ’இது ஏற்புடையதல்ல. சீக்கிரம் எங்களைப் பிரிந்துவிட்டாய்’ எனப் பதிவு செய்துள்ளார்.


குஷ்பு தனது இரங்கலில் ‘யாரிடமும் சண்டையிடாதீர்கள், பகை பாராட்டாதீர்கள். வாழ்க்கை நிச்சயமற்றது. இன்று இருப்பவர்கள் நாளை இருக்கமாட்டார்கள்’ என வருத்தம் தெரிவித்துள்ளார். 






நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்பட ஆடியோ இன்று வெளியாக இருந்த நிலையில் அது தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.






மேலும் நடிகர்கள் ரிதேஷ் தேஷ்முக், ஜெனீலியா, ஆர்யா, சித்தார்த், பார்வதி, துல்கர் சல்மான் மற்றும் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஆகியோரும் புனித் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.