ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News
✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
  • இந்தியா
  • Fact Check: பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையில் மூவர்ண கொடி தலைகீழாக இருந்ததா?

Fact Check: பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையில் மூவர்ண கொடி தலைகீழாக இருந்ததா?

Ad
செல்வகுமார் Updated at: 11 May 2024 10:52 AM (IST)

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் தேர்தல் பரப்புரையில் மூவர்ண கொடி தலைகீழாக இருந்ததாக வீடியோ பரவி வருகிறது.

Fact Check: பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையில் மூவர்ண கொடி தலைகீழாக இருந்ததா?

பிரியங்கா காந்தி (Courtesy - FACT CRESCENDO)

NEXT PREV




மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பொதுத் தேர்தல் ஏப்ரல் 26, 2024 இன்று நடைபெற்றது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் கர்நாடகாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.


இந்த பின்னணியில், பிரியங்கா காந்தியின் தேர்தல் பேரணிக்கு முன்னதாக, பெங்களூருவில் தங்கள் விளம்பர பதாகைகளில் காங்கிரஸ் மூவர்ண கொடியை தலைகீழாக பயன்படுத்தியதாக வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 




“பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, வத்ரா பகுதியில் பேரணியின் போது வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளில் மூவர்ண கொடியை தலைகீழாகக் காட்டப்படுகின்றன. மேலே பச்சை நிறத்துடன் இருக்கிறது" என பதிவிட்டு வீடியோ வைரலாகி வருகிறது.  


இந்த நிலையில், இந்த செய்தியின் உண்மை குறித்து ஆராய்ந்தோம்.  இது குறித்து தேடியபோது, ​​ஃபர்ஸ்ட் போஸ்ட் ஆங்கில செய்தி இணையதளம் “மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தேசியக் கொடியை அவமதிக்கும் பிரியங்கா காந்தியின் விளம்பர பதாகைகளில்  மூவர்ணக் கொடியை தலைகீழாக இருப்பதை காட்டுகிறது என்ற தலைப்பில் கட்டுரையைக் கண்டோம்.


பதாகைகளில் மூவர்ணக் கொடி தலைகீழாக இருப்பது வைரல் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதன் ஸ்கிரீன் ஷாட்களும் கட்டுரையில் பகிரப்பட்டது. 




இந்த செய்தி வெளியிடப்பட்ட தேதியானது, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆகும். இதிலிருந்து, நாம் அறியலாம், இந்த நிகழ்வானது, தற்போதைய மக்களவை தேர்தலின் போது இது நடைபெறவில்லை என அறிய முடிகிறது.


எனவே , சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்துக்கு சென்ற போது தேசிய கொடி தலைகீழாக இருந்தது என பரப்பப்படும் வீடியோ உண்மையல்ல என்பதை தெரிவித்து கொள்கிறோம். 


சமூக வலைதளங்களில் பல பொய் செய்திகள் பரவி வருகிறது. எந்தவொரு செய்தியையும் பகிர்வதற்கு முன்னர், அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பகிரவும். பொய் செய்தியாக இருந்தால் பகிர வேண்டாம், அந்த பதிவை ரிப்போர்ட் செய்யுங்கள். 



பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Fact crescendo என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.






Published at: 26 Apr 2024 10:05 PM (IST)
Tags: Priyanka Gandhi Fact Check 2024 General Election
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.