'ராமரின் காவிய வாழ்க்கை' ராம நவமி வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர் முர்மு
சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று சூர்ய வம்சத்தில் ராமர் அவதரித்ததாக நம்பப்படுகிறது. சில ஆண்டுகளில், ராம நவமி பங்குனி மாதத்திலும் வரும். இந்த ஆண்டு, ஏப்ரல் 6ஆம் தேதி (நாளை) ராம நவமி கொண்டாடப்படுகிறது.

பகவான் ஸ்ரீ ராமரின் கொள்கைகளிலிருந்து கற்றுக்கொண்டு, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று சூர்ய வம்சத்தில் ராமர் அவதரித்ததாக நம்பப்படுகிறது. சில ஆண்டுகளில், ராம நவமி பங்குனி மாதத்திலும் வரும். இந்த ஆண்டு, ஏப்ரல் 6ஆம் தேதி (நாளை) ராம நவமி கொண்டாடப்படுகிறது.
Just In




"ராமரின் காவிய வாழ்க்கை"
இந்த நிலையில், ராம நவமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புனித விழா மரியாதா புருஷோத்தமர் பகவான் ஸ்ரீ ராமரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. பகவான் ஸ்ரீ ராமரின் காவிய வாழ்க்கைப் பயணம் உண்மை, தர்மம் மற்றும் நெறிமுறைகளின் பாதையைப் பின்பற்ற நம்மைத் தூண்டுகிறது.
இந்த விழா, அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டுடன் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான செய்தியை வழங்குகிறது. இந்தப் புனிதமான விழா தியாகம், தன்னலமற்ற அன்பு மற்றும் ஒருவரின் வார்த்தையில் உறுதியாக இருத்தல் போன்ற வாழ்க்கைப் பண்புகளைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கிறது.
இந்தப் புனிதமான தருணத்தில், பகவான் ஸ்ரீ ராமரின் கொள்கைகளிலிருந்து கற்றுக்கொண்டு, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாளில் 108 அல்லது 1008 முறை ஸ்ரீ ராம ஜெயம் எழுதி ராம நாமம் உச்சரித்தால் ராமரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், இந்த நாளின் ராமாயண கதை மற்றும் ராமரின் வரலாறு கேட்டாலோ, படித்தாலோ ராமர் நன்மையை தருவார் என்பதும் நம்பிக்கை.
ராம நாமம்:
’ரா’ என்று உச்சரிக்கும்போது வாய் திறக்கும், 'மா' என்று உச்சரிக்கும்போது வாய் மூடப்படும். இதன்மூலம் ஏற்படும் சக்திகள் உடலுக்குள் கடத்தப்படுவதாக ஐதீகம். அதனால்தான் ராமர் நாமத்தை உச்சரிப்பதால் அற்புதங்கள் நடக்கிறது என்று கூறப்படுகிறது. ராம நாமத்தை நாள்தோறும் உச்சரிப்பவர்கள் இறந்த பிறகு வைகுண்டத்தை அடைவார்கள் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ராமர் என்ற பெயருடன் தொடர்புடைய பல பரிகாரங்களும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: TN Economic Growth: லிஸ்டிலேயே வராத குஜராத், உ.பி., புது உச்சம் தொட்ட தமிழ்நாடு..! எதில் தெரியுமா? வாயடைத்த பாஜக