பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் இரவு 8 மணிக்கு பேசியபோதெல்லாம் பண மதிப்பிழப்பு உள்ளிட்ட பெரும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதால், இன்று அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்தும் முக்கிய தகவல்களை அவர் வெளியிடலாம் எனவம் எதிர்பார்க்கப்படுகிறது.