பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) முழுவதும் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை(07.05.25)அதிகாலை நடத்திய தொடர்  தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

இந்தியா அதிரடி தாக்குதல்:

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட தீவிரவாத  தாக்குதலுக்குப் பதிலடியாக, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்பது தளங்களை ஆபரேஷன் சிந்தூர் என்று அழைக்கப்படும் எல்லை தாண்டிய தாக்குதலில் ஈடுப்பட்டது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமை இடம் என்று அழைக்கப்படும் பஹாவல்பூர் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களில் இரண்டு பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன, இதில் ஒவ்வொரு தளத்திலும் 25-30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். முரிட்கேவில், இலக்காக இருந்த மஸ்ஜித் வா மர்காஸ் தைபா, எல்.இ.டி.யின் முக்கிய தலைமையகம் ஆகும் , இது நீண்ட காலமாக பாகிஸ்தானின் "பயங்கரவாதம் இடம்" என்று கருதப்படுகிறது.

Continues below advertisement

80 பேர் பலி:

மற்ற இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை புலனாய்வு அமைப்புகள் இன்னும் சரிபார்த்து வருகின்றன. ஆரம்ப மதிப்பீடுகளின்படி மொத்தம் 80 முதல் 90 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட வசதிகளில் JeM மற்றும் LeT ஆல் இயக்கப்படும் ஏவுதளங்கள், பயிற்சி முகாம்கள் மற்றும் தீவிரமயமாக்கல் மையங்கள் ஆகியவை அடங்கும் - இவை இரண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளின் கீழ் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் கருத்து:

தாக்குதலுக்குப் பிந்தைய அறிக்கையில், இந்திய ராணுவம் "நீதி நிலைநாட்டப்பட்டது" என்ற செய்தியுடன் ஒரு வீடியோவை X இல் வெளியிட்டது. இதற்கிடையில், ஒரு குழந்தை உட்பட எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது, மேலும் இந்த தாக்குதலை "அப்பட்டமான போர் நடவடிக்கை" என்று அழைத்தது.

பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் இல்லை:

ஒன்பது தளங்களில் நான்கு பாகிஸ்தானுக்குள் அமைந்துள்ளன, மீதமுள்ள ஐந்து இடங்கள் பாகிஸ்தான் காஷ்மீரில் இருந்தன. பாகிஸ்தான் இராணுவம், ஐஎஸ்ஐ மற்றும் சிறப்பு சேவைகள் குழு (எஸ்எஸ்ஜி) ஆகியவற்றின் கூறுகள் பயங்கரவாத பயிற்சி உள்கட்டமைப்பை ஆதரிப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டாலும், பாகிஸ்தான் இராணுவ நிறுவல்கள் எதுவும் குறிவைக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

பாகிஸ்தான் பதில் தாக்குதல்:

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் படைகள் கடுமையான எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலைத் தொடங்கின. இந்திய தரப்பில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர், மேலும் சமீபத்திய தகவல்களின்படி துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.