வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தில் சில திருத்தம்: புதிய தொழிலாளர் சட்டம் சொல்வது என்ன?

புதிய ஊதியக் குறியீட்டின் கீழ், அடிப்படை சம்பளக் கூறு மொத்த ஊதியத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டும்

Continues below advertisement

வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம், பிஎப் (வருங்கால வைப்பு நிதி) மற்றும் வேலை நேரம், ஒரு வாரத்தில் மொத்த வேலை நேரம் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும் புதிய தொழிலாளர் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன, ஆனால் அவை அமலாக்கப்படுவதில் தாமதமாகின்றன. இதனால் இந்திய மாநிலங்கள் இந்த புதிய தொழிலாளர் விதிமுறைகளை இன்னும் அறிவிக்கவில்லை.

Continues below advertisement

இந்த புதிய தொழிலாளர் சட்டங்களை ஜூலை 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு சில மாநிலங்கள்  தொழிலாளர் குறியீடுகளின் கீழ் இன்னும் விதிகளை உருவாக்காததால், சட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை.

ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் உறவுகள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலை நிலைமைகள் உள்ளிட்ட முந்தைய மொத்தம் 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை மதிப்பாய்வு செய்து ஒருங்கிணைத்து நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகள் உருவாக்கப்பட்டன.

 

புதிய ஊதியக் குறியீட்டின் கீழ், அடிப்படை சம்பளக் கூறு மொத்த ஊதியத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டும், இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பில் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பள (Takehome) உயர்வைக் குறைக்கும், ஏனெனில் அந்த பகுதி 12 சதவீதமாக அமைக்கப்பட்டுள்ளது. 

புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ், மொத்த சம்பளத்தில் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அதிகரிப்பதால், ஓய்வூதிய கார்பஸ் மற்றும் பணிக்கொடை தொகை அதிகரிக்கும். நிறுவனங்கள் ஊழியர்களின் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 8-9 மணிநேரத்தில் இருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கலாம் என்று குறியீடு கூறுகிறது, ஆனால் மூன்று நாட்கள் வார விடுமுறைகள் கொடுக்க வேண்டும்.

எனவே, வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கை நான்காக குறைக்கப்படும், ஆனால் வாரத்திற்கு வேலை நேரங்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கும். புதிய ஊதிய ஒழுங்குமுறையின்படி, ஒவ்வொரு வாரமும் மொத்தம் 48 மணிநேரம் ஓய்வு கட்டாயம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola