வருவமான வரி செலுத்த வசதியாக ஏற்கெனவே இருந்த இ-தளம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக புதிதாக மாற்றப்பட்டது. இந்த புதிய தளம் மாற்றப்பட்டது முதல் நிறையே பிரச்னைகள் இருந்து வந்தது. குறிப்பாக பழைய தளத்தை போல் இந்த தளம் எளிமையானதாக இல்லை என்று நிறையே பேர் புகார் கூறி வந்தனர். அத்துடன் அவ்வப்போது இந்த தளத்தை பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது.  அந்தவகையில் நேற்று ஒருநாள் முழுவதும் இந்த தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 


இந்நிலையில் இந்த புதிய தளத்தில் தொடர்ந்து வரும் தொழில்நுட்ப பிரச்னை தொடர்பாக நேரில் வந்து இன்ஃபோசிஸ் சிஇஒ விளக்கம் அளிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறையின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது. அதில், "வருமானவரி செலுத்தும் புதிய தளத்தில்  இரண்டரை மாதங்களுக்கு பிறகும் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த பிரச்னை தொடர்பாக இன்ஃபோசிஸ் சிஇஒ சலீல் பாரேக் நேரில் வந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் 23.08.2021(நாளை) விளக்கம் அளிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.