NEET Exam: நாடு முழுவதும் நீட் தேர்வு நிறைவு...! வினாத்தாள் எப்படி இருந்தது?

மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்.க்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நிறைவு பெற்றது. இந்த தேர்வை சுமார் 21 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

Continues below advertisement

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பு ஆகிய படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

Continues below advertisement

அறிவிக்கப்பட்டபடி நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும், 13 திருநங்கைகளும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் நீட் தேர்வை எழுதினர். தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை உட்பட 24 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்வு எழுதினர்.

வினாத்தாள் எப்படி இருந்தது?

உயிரியல் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்ததாகவும், இயற்பியல் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தேர்வு மாணாவர்கள் கூறினார். மொத்தத்தில் வினாத்தாள் மிகவும் கடினமாகவோ அல்லது மிகவும் எளிதாகவோ அல்லாமல் நடுநிலையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 

தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் காலை 11.30 மணியில் இருந்தே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 1.30 மணி வரை மட்டுமே அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுமைய அனுமதி சீட்டு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சரிபார்த்து மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதியவர்கள் வெளிப்படையான தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

கட்டுப்பாடுகள்:

தேர்வறையில் கைபேசி, கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி அணியவும் தடை விதிக்கப்பட்டது. தலைமுடியில் ஜடை பின்னல் போட அனுமதிக்கப்படவில்லை. அனுமதிச்சீட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இல்லாத பட்சத்தில் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது. தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால் தேர்வின்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மணிப்பூரில் கலவரம் காரணமாக நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையால்,  அங்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அங்கு நீட் தேர்வு நடத்தப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola