பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து. சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் விலகிய நிலையில், சித்துவும் இப்போது ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை சித்து அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.