உத்தர பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை அங்கிருந்த சில குரங்கள் கடித்து விரட்டியுள்ளது. 


பகத்பட் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் 6 வயது சிறுமியின் பெற்றோர்கள் அவர்களது குழந்தைக்கு நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அந்த நபர் மீது காவல் துறையினர் போக்ஸோ வழக்குப் பதிவு செய்துள்ளனர். 


6 வயது சிறுமியின் பெற்றோர்கள் அளித்துள்ள புகாரில், “ கடந்த சனிக்கிழமை 6 வயது சிறுமியை (UKG வகுப்பு படிக்கிறார்) மர்ம நபர் ஒருவர் ஏமாற்றி அவரை ஆள்நடமாட்டம் இல்லாத வீடு இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியின் ஆடைகளை கழற்றியுள்ளார். அவர் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அங்கிருந்த சில குரங்குகள் அந்த நபரை கடித்து துரத்தியுள்ளது. எங்கள் மகள் அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பி, அழுதுகொண்டே நடந்ததை விவரிக்க முயன்றார்.” என்று தெரிவித்துள்ளனர். 


இது தொடர்பாக 6 வயது சிறுமியின் தந்தை தெரிவிக்கையில்,” எனது மகள் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அடையாளம் தெரியாத நபர் அவரை கடத்திச் சென்றுள்ளது அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இருந்தாலும் அவர் யாரென்பது இன்னும் தெரியவில்லை. அந்த நபர் என் மகளை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். அந்த இடத்தில் குரங்குகள் மட்டும் இல்லையென்றால் என் மகள் இறந்திருப்பார். நினைத்தாலே வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 


பக்பாத் பகுதி காவல் துறையினர் தெரிவிக்கையில், “ இந்த வழக்கில் குற்றவாளியை தேடும் பணி நடந்து வருகிறது. மர்ம நபர் மீது குற்றவாளி மீது BNS 74,76 மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்தார். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.