கடந்த திங்கள் கிழமை ஹைதராபாத் மற்றும் விஜயவாடாவில் உள்ள எம்பிஎஸ் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் முசதிலால் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் இயக்குநர்கள் சுகேஷ் குப்தா மற்றும் அனுராக் குப்தா ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ₹149.10 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்ததாகவும், ₹1.96 கோடி ரொக்கம் மீட்கப்பட்டதாகவும் அமலாக்க இயக்குனரகம் (ED) தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி மற்றும் போதுமான டெபாசிட் தொகை இல்லாமல் தங்க கட்டிகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக கூறி எம்பிஎஸ் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் முசதிலால் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்ஸ், இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.பொதுத்துறை நிறுவனத்தை மோசடி செய்ததாக சுகேஷ் குப்தா மற்றும் அவரது நிறுவனங்களுக்கு எதிராக, ஹைதராபாத்தில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட எம்பிஎஸ் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் முசாதிலால் ஜூவல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் இதன் இயக்குனர்கள் சுகேஷ் குப்தா, அனுராக் குப்தா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் உட்பட 5 இடங்களில் கடந்த 17ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.