அமலுக்கு வந்த பிளாஸ்டிக் தடை...டெல்லி மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைகள்

பிளாஸ்டிக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கருத்தில் கொண்டு டெல்லி மாநகராட்சி அலுவலர்கள் வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

Continues below advertisement

நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கருத்தில் கொண்டு டெல்லி மாநகராட்சி அலுவலர்கள் வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். 350க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

Continues below advertisement


டெல்லி மாநகராட்சி தடையை அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தாமல் தவிர்க்க, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குழுக்களை உருவாக்கி வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "டெல்லி மாநகராட்சி, 689.01 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடையை கருத்தில் கொண்டு அதன் அதிகார வரம்பில் 368 பேருக்கு அபராதம் விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்களின் இருப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஒழிக்க மண்டல அளவில் மொத்தம் 125 அமலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இது தொடர்பாக அரசு அலுவலர்கள் கூறுகையில், "சில பிளாஸ்டி பொருட்களுக்கான தடை வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநில அரசுகள் அத்தகைய பொருட்களின் உற்பத்தி, விநியோகம், கையிருப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களை அடையாளம் கண்டு மூடுவதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளன" என்றார்கள்.

இதுகுறித்து டெல்லி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், "அடையாளம் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் பலூன்கள், கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தெர்மாகோல், தட்டுகள், கப்கள், கண்ணாடிகள், முட்கரண்டிகள், கரண்டிகள், கத்திகள், ஸ்ட்ராக்கள், தட்டுகள், பேக்கேஜிங் படங்களுக்குப் பயன்படுத்தப்படும் இயர்பட் குச்சிகள் மற்றும் குச்சிகள் அடங்கும்.

மிட்டாய் பெட்டிகள், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் ஆகியவையும் அடங்கும்.


மண்டல அளவில் உள்ள குழுக்கள், பொதுமக்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக சணல் அல்லது துணிப் பைகளைப் பயன்படுத்துவது குறித்து சந்தை சங்கங்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாயன்று பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், "தடைக்கு தயாராக தொழில்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் அரசாங்கம் போதுமான அவகாசம் அளித்துள்ளது. அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement