Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?

Manmohan Singh: மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நடத்திய கடைசி செய்தியாளர் சந்திப்பின்போது, பேசியது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

Manmohan Singh: மன்மோகன் சிங் தான் பலவீனமான பிரதமர் இல்லை என, 2014ம் ஆண்டு நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

Continues below advertisement

மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தி, வளர்ச்சிக்கு வித்திட்ட சிறந்த பிரதமர் என்ற பெருமை அவருக்கு உண்டு. அதேநேரம், பொம்மை பிரதமர், பலவீனமான பிரதமர், சோனியா காந்தி கட்டுப்பாட்டில் இயங்கிய பிரதமர் என்ற விமர்சனங்களும் அவர் மீது உள்ளன. இதுதொடர்பாக, கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் நடத்திய கடைசி செய்தியாளர் சந்திப்பில் அவரே விளக்கமளித்தார். அதில், ” தான் பலவீனமான பிரதமர் இல்லை” என விளக்கமளித்தார்.

”வரலாறு பேசும்..”

பலவீனமான பிரதமர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய மன்மோகன் சிங், "நான் பலவீனமான பிரதமராக இருந்தேன் என்று நான் நம்பவில்லை. தற்போது ஊடகங்களில் சொல்லப்படுவதை காட்டிலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சொல்வதைக் காட்டிலும் வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும் என்று நான் நேர்மையாக நம்புகிறேன். அரசியல் நிரிபந்தங்களுக்கு மத்தியில் என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். நான் என்ன செய்தேன் அல்லது என்ன செய்யவில்லை என்பதை சரித்திரம் தீர்மானிக்க வேண்டும்" என்று பேசினார்.

தீர்க்கமாக செயல்படவில்லையா?

பல சமயங்களில் தீர்க்கமாக செயல்படவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.  2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாகவும் பாஜகவையும் சாடினார். அதன்படி,  "அகமதாபாத் தெருக்களில் அப்பாவி குடிமக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தலைமை தாங்கி நடத்தியதை பிரதமரின் பலமாக நீங்கள் அளவிடுகிறீர்கள் என்றால், எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. இந்த வகையான வலிமை குறைந்தபட்சம் பிரதமரிடமிருந்து இந்த நாட்டிற்கு தேவை என்று நான் நினைக்கவில்லை.  நரேந்திர மோடி பிரதமராக இருப்பது நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும்" என மன்மோகன் சிங் பேசினார். 

மன்மோகன் சிங் பெருமிதம்

UPA I மற்றும் UPA II இல் அவர் இரண்டு முறை பிரதமராக இருந்தபோது, ​​கூட்டணி ஆட்சியை நடத்தும் காங்கிரஸின் திறனைக் காட்டியதுடன், இந்த கட்சி கூட்டணியை நடத்த முடியாது என்ற எண்ணத்தை நீக்கியது. ”இந்த செயல்பாட்டில் சில சமரசங்கள் செய்யப்பட்டாலும், அவ கட்சி பிரச்னைகளே தவிர, தேசிய பிரச்சனைகளில் அல்ல" என மன்மோகன் சிங் குறிப்பிட்டார். மேலும், "நான் பிரதமராக இருந்த காலத்தில் எந்த ஒரு போதாமை காரணமாகவும் என்னை பதவி விலகுமாறு யாரும் கேட்கவில்லை" என்றும் மன்மோகன் சிங் விளக்கமளித்தார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola