இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!

தீர்ப்பில் திருப்தி அடையவில்லை என்றும் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சீல்டா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தீர்ப்பில் திருப்தி அடையவில்லை என்றும் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசுகையில், “முதல் நாளிலிருந்து குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம், இன்னும் அதையே கோரி வருகிறோம். வழக்கு எங்கள் கையில் இருந்திருந்தால், வழக்கில் மரண தண்டனையை நீண்ட காலத்திற்கு முன்பே விதித்திருப்போம், ஆனால் அது எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. எங்களுக்கு நீதி வேண்டும். இதுபோன்ற குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவில் நான் திருப்தி அடையவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

அரசு நடத்தும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து, சீல்டா நீதிமன்றம் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி, முதுகலை பயிற்சி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சீல்டா கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் ராய் குற்றவாளி என தீர்ப்பளித்தது, மேலும் இறந்த மருத்துவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola