மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பெற்ற தாயை மகனே கொலை செய்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உருளி காஞ்சன் பகுதியில் படிக்க சொல்ல திட்டியதாக தாயை பதின்ம பருவ வயது சிறுவன் கொலை செய்ததாக கூறப்படுகிறது. 


கொலையை தற்கொலை போல் காட்ட முயற்சி:


பின்னர், கொலையை தற்கொலை போல் காட்ட இளைஞர் முயற்சி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரின் பெயர் ஜிஷான் ஜமீர் ஷேக். இவருக்கு வயது 18. இவர் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட தாயின் பெயர் தஸ்லிம் ஜமீர் ஷேக். இவருக்கு வயது 37.


கொலை சம்பவத்தை விவரித்த காவல்துறை தரப்பு, "12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜிஷான். இவர் நன்றாகப் படிக்கவில்லை என்று தாய் தஸ்லிம் திட்டியதாகவும், அறைந்ததாகவும் கூறி கோபமடைந்து தனது தாயை சுவரில் தள்ளி கழுத்தை நெரித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. 


தந்தையும் சகோதரியும் வீட்டில் இல்லாத நேரத்தில் கொடூரம்:


பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் ஜிஷானின் தந்தையும் சகோதரியும் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. லோனி கல்போர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.


கொலையை தற்கொலையாக சித்தரிக்கும் முயற்சியில், ஜிஷான் தனது தாயின் மணிக்கட்டை வெட்டினார். ரத்தக்கசிவு இல்லாததால், மின்விசிறியில் கம்பியை கட்டி தாயின் உடலை தொடங்க விட்டுள்ளார்.


அவரது தந்தை திரும்பி வந்தபோது, ​​​​அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டதாகவும், தொங்கிய உடலை கீழே எடுத்ததாகவும் ஜிஷான் அவரிடம் கூறினார். தஸ்லிமின் குடும்பத்தினர் அவரது உடலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடலைப் பார்த்து சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், பிரேத பரிசோதனை செய்த சாசூன் மருத்துவமனைக்கு உடலை கொண்டு செல்லும்படி கூறினர்.


பிரேத பரிசோதனையில் அம்பலம்:


கழுத்தை அழுத்தியதில் அவர் இறந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. மேலும், அவரது உடலில் காயங்கள் அப்பட்டமாக தென்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் தஸ்லிம் கொலை செய்யப்பட்டதை உறுதிசெய்து, விசாரணை தொடங்கப்பட்டு அவரது மகன் காவலில் வைக்கப்பட்டார். 


ஜிஷானின் தாயைக் கொலை செய்ததற்காக வியாழக்கிழமை மகனை கைது செய்தோம். மேலும் விசாரணைக்காக அவரை நீதிமன்ற காவலில் எடுக்க முறையிடுவோம்" என்று கூறியது.


சமீபகாலமாகவே, கொடூரமான கொலை சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. குறிப்பாக, டெல்லியில் காதலியை லிவ் இன் ரிலேஷன்ஷிப் காதலன் கொலை செய்து உடல் பாகங்களை பல தூண்டுகளாக வெட்டிய சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.