மத்திய பிரதேசம் குவாலியர் அருகே 6 வயது சிறுமியை 53 வயது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, குற்றவாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 


என்ன நடந்தது..?


கைது செய்யப்பட்டவர் சிறுமியிடம் கேம் விளையாடலாம் என்று 6 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தையை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த குழந்தையும் அவருடன் அவரது வீட்டிற்குள் சென்றுள்ளது. அப்போது,   அந்த நபர் சிறுமியை தனது அறைக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தகாத முறையில் நடந்துகொண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். 


இதனால், அந்த 6 வயது சிறுமி தனது நேர்ந்த கொடுமை குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளது. சம்பவம் நடந்து 2, 3 நாட்களுக்கு பிறகு சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.  தொடர்ந்து, சிறுமிக்கு வாந்தியும், அடிவயிற்றில் வலியும் ஏற்பட்டுள்ளது. இதனைப்பார்த்த சிறுமியின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 


பெற்றோர்கள் தொடர்ந்து விசாரித்ததில், சிறுமி அனைத்தையும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார்.  


யார் அந்த நபர்..? 


தப்ரா நகர் காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட ஹனுமங்கஞ்ச் நகரில் உள்ள வாடகை வீட்டில் தனது பெற்றோருடன் வசிக்கும் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமி, தனது வீட்டிற்கு வெளியே தனியாக விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அதே குடியிருப்பை சேர்ந்த  53 வயதான ஷௌகத் கான், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்துள்ளார்.


இந்த சம்பவத்திற்கு முன்பாக பக்கத்து வீடு என்பதால் சிறுமி அவ்வபோது ஷௌகத் கானுடன் பேசி பழகியுள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஷௌகத் கான், தனது வீட்டில் வீடியோ கேம் பிளேயர் இருக்கிறது என்று கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 


சம்பவம் தெரிந்தவுடன், பெற்றோர் குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று குற்றவாளி மீது புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரின் பேரில், போலீசார் ஷௌவுகத் கான் மீது பாலியல் வன்கொடுமை, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


போக்சோ சட்டம் : 


கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.


18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 



  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்

  • Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்

  • Sexual Assault - பாலியல் தொல்லை

  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை

  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு

  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்


இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.



  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை

  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை

  • 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)