உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி ஆகியோர் நேற்று (புதன்கிழமை) அயோத்தியில் ‘லதா மங்கேஷ்கர் சதுக்கத்தை’ திறந்து வைத்தார், பாரத ரத்னா விருது பெற்ற புகழ்பெற்ற பாடகியான அவரின் 93 வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தினார்.


லதா மங்கேஷ்கர் சதுக்கம்


இந்தியாவின் இசைக்குயில் என்று அழைக்கப்படும் பிரபல பழம்பெரும் பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார். அவரது 93வது பிறந்த நாளை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியாவில் சரயு நதிக் கரையில் ரூ.7.9 கோடி மதிப்பில் வீணை சிலையுடன் பிரம்மாண்ட சதுக்கம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணோலி வாயிலாக திறந்து வைக்க, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரும் பங்கேற்றனர்.



யோகி ஆதித்யநாத்


இந்த நிகழ்வில் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், "லதா மங்கேஷ்கர் தனது முழு வாழ்க்கையையும் கலை மற்றும் இசைக்காக அர்பணித்தவர். மற்றும் ராமரின் பெரும்பாலான 'பஜனை பாடல்களை' பாடியவர். அயோத்தியில் ராமர் கோயில் செல்லும் சாலைக்கு ‘லதா மங்கேஷ்கர்’ பெயர் சூட்டி இன்று திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறேன். இது மிகப் பெரிய இந்தியச் சின்னங்களில் ஒருவருக்குச் செலுத்தும் பொருத்தமான அஞ்சலி” என்று கூறினார். அயோத்தியை அழகுபடுத்தும் பணியை காலக்கெடுவிற்குள் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இதன்மூலம் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ராமர் கோயில் தயாராகும் போது, ​​அயோத்தியை உலகமே நன்கு திட்டமிடப்பட்டு அழகான நகரமாக பார்க்கிறது என்றார்.


தொடர்புடைய செய்திகள்: பவர் தெரியாம விளையாடிட்டு இருக்கீங்க...ஊடகத்தினரை எச்சரிக்கும் TTF வாசன்


இரண்டு மாதங்களாக தயாரிக்கப்பட்ட சிலை


திறந்துவைக்கப்பட்ட இந்த வீணை 40 அடி நீளமும், 14 டன் எடை கொண்டதாகும். அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் சத்யேந்திர சிங் இது குறித்து பேசுகையில், "இந்த மாபெரும் வீணை சிலையை பத்மஸ்ரீ விருது பெற்ற ராம் சுதார் இரண்டு மாதங்களாக தயாரித்துள்ளார். மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வீணையில் இசையின் தெய்வமான சரஸ்வதி தேவியின் படம் பொறிக்கப்பட்டுள்ளது", என்று அவர் கூறினார்.



பிரதமர் மோடி


இதனை தொடர்ந்து காணொலி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் பிரபல பின்னணி பாடகியான பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கரின் பிறந்த தினமான இன்று, அவருக்கு நாட்டு மக்கள் மற்றும் என் சார்பாகவும் அஞ்சலியை தெரிவித்து கொள்வதாக கூறினார். மேலும் பேசிய அவர், "அவருடன் எனக்கு நிறைய இனிமையான நினைவுகள் உண்டு. ஒவ்வொரு முறையும் அவரது பாடல்கள் கேட்கையில் அவர் குரல் என்னை மதி மயக்கும். அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை முடிந்த மகிழ்ச்சியில் என்னை அழைத்தார். அயோத்தியில் லதா மங்கேஷ்கர் நினைவாக நிறுவப்பட்டுள்ள சரஸ்வதியின் பெரிய வீணை, இசை நல்லிணக்கத்தின் அடையாளமாக வருங்காலத்தில் மாறும். இந்த வீணை சிலையில் உள்ள 92 வெள்ளை பளிங்கு கற்களால் செய்யப்பட்ட தாமரைகள், லதா மங்கேஷ்கரின் 92 வயது வாழ்வை சித்தரிக்கிறது. இன்று அயோத்தியில் உள்ள சாலை ஒன்றுக்கும் அவரது பெயர் சூட்டப்படுவதில் மிம்மா மகிழ்ச்சி அடைகிறேன்", என்று கூறினார்.