உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் 4 விவசாயிகள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். விவசாயிகள் மீது ஏறிய காரை மத்திய அமைச்சர் அஜய்மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராதான் காரை ஏற்றினார் என்று விவசாயிகள் குற்றம் சாட்டினார். இதனால், அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆஷிஸ் மிஸ்ராவை போலீசார் தேடி வரும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் இருவரை உத்தரபிரதேச போலீசார் இன்று கைது செய்தனர்.