கேரள மாநிலம், பத்தனம்திட்டா நகரில் எம்ஆர்ஐ ஸ்கேன் மையத்தில் உடை மாற்றிய பெண்ணை செல்போனில் போட்டோவாக எடுத்ததாக ரேடியோகிராபரை போலீஸார் கைது செய்தனர்.


ஸ்கேன் மையம்


எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையத்துக்கு ஸ்கேன் எடுப்பதற்காக பலர் வந்திருந்தனர். இந்நிலையில், ஒரு உடை மாற்றியபோது மொபைல் போன் கேமரா லைட் எரிவதை பார்த்து,  போலீஸாரிடம் தகவல் கொடுத்தார். அவர்கள் உடனடியாக  ஸ்கேன் மையத்திற்கு வந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஸ்கேன் மையத்தில் ரேடியோகிராபராக பணியாற்றிய வந்த இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் பத்தனம்திட்டா பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பாலியல் வன்கொடுமை :


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ராஜஸ்தானிலும் குற்றச்சம்பவம் அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் காவலாளியாக ஜேதுசிங் (47) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இவர் கடந்த புதன்கிழமை அதாவது நவம்பர் 9-ஆம் தேதி  காலையில் பணிக்கு சென்றுவிட்டு மாலை 5 மணியளவில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இருவரும் உணவு சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக அறைக்கு சென்றவுள்ளனர்.


அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் முன்பக்க கதவை தட்டியுள்ளனர். இதை அறிந்த ஜேதுசிங் கதவை திறந்துள்ளனர். உதவி கேட்பது போல் நடித்து அந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்பு ஜேதுசிங்கை கடுமையாக தாக்கி உள்ளனர். பின்பு, அவரிடம் இருந்த 1,400 ரூபாய் பறித்தனர். இதனை அடுத்த அந்த 4 பேர் கொண்ட கும்பல் அதிக பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களைக் கேட்டுள்ளனர். ஆனால் வெள்ளி நகைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை என தம்பதியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இதன்பிறகு ஜேதுசிங்கை 4 பேர் கொண்ட கும்பல் கடுமையாக கட்டையால் தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களிடம் எந்த விலை உயர்ந்த பொருள் மற்றும் பணம் எதுவும் இல்லாததால் ஜேதுசிங்கின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய திட்டமிட்டனர். பின்பு அந்த பெண்ணின் கணவனின் கை, கால்களை கயிற்றினால் கட்டிப்போட்டதாக கூறப்படுகிறது. பின்பு கணவரான ஜேதுசிங் கண்முன்னே மனைவியை 4 பேர் கொண்ட அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


இதுகுறித்து, உள்ளூர் காவல்நிலையத்தில் தம்பதியினர் புகார் அளித்தனர். தம்பதியினர் அளித்த புகாரின்படி போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நநிலையில், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.


‘நாங்கள் பைனான்ஸில் இருந்து வருகிறோம்’ - வீட்டில் இருந்த பெண்ணிடம் நகை பறித்த கும்பல்


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் :


இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் தொடர் கதையாகி வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி  வரை இந்திய காவல்துறை பதிவு செய்த 60 லட்சம் குற்றங்களில் 4,28,278 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடையவை என கூறப்படுகிறது.


மேலும், கடந்த ஆண்டு காவல்துறையில் 31,878 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், முந்தைய ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கையை விட 28,153 அதிகரிப்பை காட்டுகிறது என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.