Monkeypox Case in Kerala: அதிர்ச்சியளிக்கும் அடுத்தடுத்த அறிகுறி... கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை..!

monkeypox : கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Continues below advertisement

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் இந்தியாவில் தொற்று எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

Continues below advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 30 வயதான இளைஞருக்கு கண்டறியப்பட்டுள்ளது. குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மலப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கேரளாவில் 5 பேர் பாதிக்கப்பட்டும், ஒட்டுமொத்தமாக இந்தியளவில் 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க : Red Alert: அடுத்த இரண்டு நாட்களில் 4 மாவட்டங்களை ஆட்டிப்படைக்க இருக்கும் கனமழை.. மீண்டும் ஒரு ரெட் அலர்ட்!

இதற்கிடையில், ஜூலை 30 அன்று இறந்த 22 வயது இளைஞனின் மாதிரிகள் டெஸ்டில் உறுதியானது. இவரே இந்தியாவின் முதல் குரங்கம்மையால் உயிரிழந்த நபராக பதிவு செய்யப்பட்டார்.

மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் ஜூலை 27 அன்று திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உறவினர்கள் ஜூலை 30 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பரிசோதனை முடிவு குறித்து மருத்துவமனை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்." ஜார்ஜ், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உதவியாளர் மற்றும் அவருடன் கால்பந்து விளையாடியவர்கள் உட்பட 20 தொடர்புகள் அதிக ஆபத்து பிரிவின் கீழ் இருப்பதாக கூறினார்.

மேலும் படிக்க :16 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை..! உடந்தையாக இருந்த இளம்பெண்..! சூரத்தில் கொடூரம்..!

அண்டை மாநிலமான கர்நாடகாவின் முதல்வர் பசவராஜ் பொம்மை, செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளின் "முக்கியமான கூட்டத்திற்கு" கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை வசதிகள் குறித்து அழைப்பு விடுத்தார்.

உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் குரங்கு காய்ச்சலை சர்வதேச கவலையின் உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. உலகளவில், 75 நாடுகளில் இருந்து 16,000க்கும் மேற்பட்ட குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குரங்கம்மை :

குரங்கம்மை பொதுவாக காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் முனைகளுடன் வெளிப்படுகிறது மற்றும் பல மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இது பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் அறிகுறிகளுடன் சுய-கட்டுப்படுத்தும் நோயாகும்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement
Sponsored Links by Taboola