கர்நாடக உணவுத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி (வயது 61) மாரடைப்பு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் காலமானார். 


கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி செப்டம்பர் 6 செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக காலமானார். கர்நாடக அரசில் உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் வனத்துறை அமைச்சராக உமேஷ் கட்டி இருந்து வந்தார். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.


உமேஷ் கட்டி பெங்களூரில் உள்ள டாலர் காலனி குடியிருப்பின் குளியலறையில் மயங்கி கிடந்ததாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவருக்கு நாடித்துடிப்பு இல்லை என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அரசியல் பயணம் : 


1961 ஆம் ஆண்டு பிறந்த உமேஷ் கட்டி, கர்நாடகாவில் 40 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருந்த மூத்த தலைவர்களில் ஒருவர். இதுவரை ஒன்பது தேர்தல்களில் போட்டியிட்டு 8ல் வெற்றி பெற்றுள்ளார். மறைந்த ஜே.எச். படேலின் அமைச்சரவையில் முதன்முறையாக அமைச்சரானார் உமேஷ் கட்டி. 


எடியூரப்பா, டி.வி. சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை என நான்கு பாஜக முதல்வர்களின் கீழ் அமைச்சராக பணியாற்றிய பெருமை உமேஷ் கட்டிக்கு உள்ளது. 


உமேஷ் கட்டியின் அரசியல் பிரவேசம் திடீரென நடந்தது. கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டிருந்த உமேஷ் கட்டி, தனது தந்தை விஸ்வநாத் கட்டி இறந்த பிறகு, ஹுக்கேரியில் இருந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 


ராமகிருஷ்ண ஹெக்டேவின் தீவிர சீடர், அவர் தனது பொது வாழ்வில் பாதியை ஜனதா பரிவார் கட்சிகளில் கழித்தார். அவர் 2008 இல் பிஜேபியில் சேர்ந்தார். அவர் 2008 தேர்தலில் ஹுக்கேரியில் இருந்து JD(S) வேட்பாளராக வெற்றி பெற்றார். 


இறுதிச் சடங்குகளுக்காக திரு. கட்டியின் அஸ்தி ஹுக்கேரி தாலுக்காவில் உள்ள அவரது சொந்த கிராமமான பெல்லடா பாகேவாடிக்கு மாற்றப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இவரது மறைவுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கட்சி பேதமின்றி ஏராளமான தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.